செய்யார் சிப்காட்: புகழ்பெற்ற லோட்டஸ் நிறுவனம் சார்பில்,மாரத்தான் போட்டி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு!
செய்யார் சிப்காட்: புகழ்பெற்ற லோட்டஸ் நிறுவனம் சார்பில்,
மாரத்தான் போட்டி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார்,
சிப்காட் லோட்டஸ் நிறுனம் சார்பில், 'சாலை பாதுகாப்பு குறித்த - மாரத்தான் விழிப்புணர்வு போட்டி நடைப்பெற்றது
செய்யார் மாங்கால் கூட்ரோடு சிப்காட் தொழில் பூங்காவில் லோட்டஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் சில கிராமங்களை தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. 2019 - 20 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பெரும் தொற்று காலத்தில், லோட்டஸ் நிறுவனம் நிறைய கிராமங்களை தேர்வு செய்து உணவுப் பொருட்களையும்,அடிப்படை வசதிகளையும் வழங்கி வந்தது குறிப்படத்தக்கது.
இதுதவிர அரசு சார்பில், மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சம்பந்தப்பட்ட துறைகளுடன் 'லோட்டஸ்' நிறுவனம் கைக் கோர்த்து கொண்டு அந்த திட்டத்தை தங்களது பங்களிப்புடன் செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
நேற்று 'லோட்டஸ்' நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆண், பெண் ஊழியர்களுக்கான நீண்ட தூரம் ஓட்டமான மாரத்தான் போட்டிகள் நடைப்பெற்றது.
பெண் தொழிலாளர் களுக்கு மாமண்டூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் கொண்ட மாங்கால் கூட்ரோடு வரையிலும்,
ஆண் தொழிலாளர்களுக்கு தூசி காவல் நிலையத்தில் இருந்து மாங்கால் கூட்ரோடு வரையிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போட்டி நடத்தப்பட்டது. செய்யார் டி.எஸ்.பி., சண்முக வேலன், வந்தவாசி டி.எஸ்.பி., கங்காதரன் ஆகியோர் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த போட்டிகளில் மொத்தம் 500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.
ஆண் தொழிலாளர்கள் பிரிவில் சுரேந்தர், பிரகாஷ், சிவானந்தம் என, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பெண் தொழிலாளர்கள் பிரிவில் தேன்மொழி, ரேணுகாதேவி, அனு ஆகிய மூன்று பெண்களும் முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டனர்.
இவர்களுக்கான பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக, செய்யாறு கோட்டாட்ச்சியர் பல்லவி வர்மா கலந்துக் கொண்டு கோப்பை, சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் லோட்டஸ் நிறுவனத்தின் பொது மேலாளர்களான மணிமாறன், கல்யாண சுந்தரம், வெங்கடேசன், மோகன்ராஜ், காமேஷ், கந்தசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளை தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் பொறுப்பாளர்களான செல்வக்குமார், முனிர்
ஷரீப் ஆகியோர் செய்திருந்தனர்.
Comments
Post a Comment