Skip to main content

செய்யார் சிப்காட்: புகழ்பெற்ற லோட்டஸ் நிறுவனம் சார்பில்,மாரத்தான் போட்டி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு!

செய்யார் சிப்காட்: புகழ்பெற்ற லோட்டஸ் நிறுவனம் சார்பில்,
மாரத்தான் போட்டி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார்,
சிப்காட் லோட்டஸ் நிறுனம் சார்பில், 'சாலை பாதுகாப்பு குறித்த - மாரத்தான்  விழிப்புணர்வு போட்டி நடைப்பெற்றது

செய்யார் மாங்கால் கூட்ரோடு சிப்காட் தொழில் பூங்காவில் லோட்டஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் சில கிராமங்களை தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. 2019 - 20 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பெரும் தொற்று காலத்தில், லோட்டஸ் நிறுவனம் நிறைய கிராமங்களை தேர்வு செய்து உணவுப் பொருட்களையும்,அடிப்படை வசதிகளையும் வழங்கி வந்தது குறிப்படத்தக்கது.

இதுதவிர அரசு சார்பில்,  மக்களுக்கு வழங்கப்படும்  பல்வேறு நலத்திட்ட உதவிகள் சம்பந்தப்பட்ட துறைகளுடன் 'லோட்டஸ்' நிறுவனம் கைக் கோர்த்து கொண்டு அந்த திட்டத்தை தங்களது பங்களிப்புடன் செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

நேற்று 'லோட்டஸ்' நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆண், பெண் ஊழியர்களுக்கான நீண்ட தூரம் ஓட்டமான மாரத்தான் போட்டிகள் நடைப்பெற்றது.
பெண் தொழிலாளர் களுக்கு மாமண்டூர் அரசு  மேல் நிலைப் பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் கொண்ட மாங்கால் கூட்ரோடு வரையிலும்,
ஆண் தொழிலாளர்களுக்கு தூசி காவல் நிலையத்தில் இருந்து  மாங்கால் கூட்ரோடு வரையிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போட்டி நடத்தப்பட்டது.  செய்யார் டி.எஸ்.பி., சண்முக வேலன், வந்தவாசி டி.எஸ்.பி., கங்காதரன் ஆகியோர் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த போட்டிகளில் மொத்தம் 500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

ஆண் தொழிலாளர்கள் பிரிவில் சுரேந்தர், பிரகாஷ், சிவானந்தம் என, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பெண் தொழிலாளர்கள் பிரிவில் தேன்மொழி, ரேணுகாதேவி, அனு ஆகிய மூன்று பெண்களும் முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக, செய்யாறு  கோட்டாட்ச்சியர் பல்லவி வர்மா கலந்துக் கொண்டு  கோப்பை, சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் லோட்டஸ் நிறுவனத்தின் பொது மேலாளர்களான மணிமாறன், கல்யாண சுந்தரம், வெங்கடேசன், மோகன்ராஜ், காமேஷ், கந்தசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
சாலை பாதுகாப்பு  ஏற்பாடுகளை தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை  நிறுவனத்தின் பொறுப்பாளர்களான செல்வக்குமார், முனிர்
ஷரீப் ஆகியோர் செய்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...