உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வந்தை முன்னேற்ற சங்கம் சார்பில் உலக சாதனை நிகழ்வு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் செயலாற்றி வரும் "வந்தை முன்னேற்ற சங்கம்" சார்பில்,உலக சாதனை நிகழ்வாக, தமிழில் ஒரு லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கையெழுத்திடும் நிகழ்வு வரும் 10.2.2025 திங்கள் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது இதற்கான அங்கீகாரம் ஆல் இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் வழங்குகிறது இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வந்தை முன்னேற்ற சங்கத்தின் தலைவர் வந்தை எம்.பிரேம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் இதற்கான அழைப்பிதழ்களை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி செயலர் எம்.ரமணன் தெள்ளார் அரவிந்த் பள்ளியின் முதல்வர் மகாலட்சுமி சக்கரவர்த்தி கிங் நந்திவர்மன் முதல்வர் ஏழுமலை கீழ்கொடுங்காலூர் அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜா சங்கீதா செந்தமிழ் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் குமரன் தெள்ளார் ஜோதி நிதியுதவி பள்ளியின் முதல்வர் பழ சீனிவாசன் கல்லாங்குத்து பள்ளியின் ஆசிரியை சா.ரசீனா ஆகியோருக்கு அழைப்பிதழ்களை வந்தை எம்.பிரேம்,கல்வித் துறை அலுவலக பணியாளர்கள் சங்கத் தலைவர் பெ.முருகன் வந்தை குமரன் ஆகியோர் வழங்கினர் மேலும் ஒரு லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கையெழுத்திடும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்
தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...
Comments
Post a Comment