ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் முகாம்: தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், விழிப்புணர்வு!
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் முகாம்: தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், விழிப்புணர்வு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் முகாம் தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது
இதில் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், சட்ட ஆலோசனைகள் விழிப்புணர்வு ஆகிய உரையரங்கம் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு தலைமையில் நடைபெற்றது ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் கலைவாணி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மு.பிரபாகரன் பங்கேற்று தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு உடனடியாக நிவர்த்தி செய்யும் முறைகளை விளக்கினார். மேலும் ஏரி, குளங்கள் மற்றும் ஆற்றுப் பகுதியில் குளிக்க சென்றால் பெற்றோர் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்கள் பாதுகாப்பு,சொத்துரிமை சட்டம் சார்ந்த கருத்துக்களை மூத்த வழக்கறிஞர் சா.இரா.மணி எடுத்துரைத்தார் மனநல ஆலோசகர் டாக்டர் இரா.பாஸ்கரன், சட்ட ஆர்வலர் நடராஜன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது, தீயணைப்பு வீரர் முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி நன்றி கூறினார்.
Comments
Post a Comment