Skip to main content

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியினை கடந்த வருடத்தை விட, அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் - தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன்

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியினை கடந்த வருடத்தை விட, அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும்  - தென்னிந்திய  தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன்

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தென்னிந்திய  தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன்  சார்பாக தமிழ்நாடு அரசுக்கு  ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை தமிழக அரசு கடந்த வருடத்தைவிட அதிகமாகவும்,  உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அசோசியேசன் தலைவர் ஹாஜி சையது முகம்மது கலிபா சாஹிப் காதிரி மற்றும் செயலாளர் முஜம்மில் ஜாபர் விடுவித்துள்ள கோரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

"வருடா வருடம் தமிழக அரசு  இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை பள்ளி வாசல்களுக்கும் தர்காக்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசிற்க்கு தமிழக இஸ்லாமிய மக்கள் மனதார நன்றி செலுத்தி வருகின்றனர்.

கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களுக்கு 6.5 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் முழுமையாக இந்த பயன்பாட்டினை அடைவதில்லை ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் தர்காக்கள் மற்றும் தைக்காக்கள் மட்டுமே இந்த பயன்பாட்டினை பெற்று வருகின்றனர். மாவட்டந் தோறும் இருக்கின்ற அனைத்து பள்ளிவாசல்கள் தர்காக்களில் இத்தகைய திட்டத்தை எடுத்துக் கூறி அனைத்து பள்ளிவாசல் தர்காக்களுக்கும் இந்த ரமலான் அரிசி கிடைத்திட வழி வகை செய்திட வேண்டும். இஸ்லாமிய மக்கள் விகிதாச்சாரப்படி கடந்த வருடத்தை விட அதிகப்படுத்தி ரமலான் கஞ்சிக் காண அரிசி வழங்குதலை உயர்த்த வேண்டும், இதனை நாங்கள் தமிழக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு  கோரிக்கை விடுத்திருந்தோம்

தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு  தமிழக அரசு இதனை ‪உயர்த்த வேண்டும். மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி நிர்வாகம் நோன்பு பிறைக்கு (மார்ச் 1க்கு) முன்பாகவே தமிழக அரசின் விலையில்லா அரிசியினை அந்தந்த பள்ளி வாசலுக்கும் உரிய தர்காவிற்க்கும், தைக்காலுக்கும் சேர்த்திட வேண்டும், இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்படும் ஆகவே தமிழக அரசு இந்த விஷயத்தில் கடந்த வருடத்தைவிட அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...