ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியினை கடந்த வருடத்தை விட, அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் - தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன்
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியினை கடந்த வருடத்தை விட, அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் - தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன்
சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை தமிழக அரசு கடந்த வருடத்தைவிட அதிகமாகவும், உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
அசோசியேசன் தலைவர் ஹாஜி சையது முகம்மது கலிபா சாஹிப் காதிரி மற்றும் செயலாளர் முஜம்மில் ஜாபர் விடுவித்துள்ள கோரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
"வருடா வருடம் தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை பள்ளி வாசல்களுக்கும் தர்காக்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசிற்க்கு தமிழக இஸ்லாமிய மக்கள் மனதார நன்றி செலுத்தி வருகின்றனர்.
கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களுக்கு 6.5 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் முழுமையாக இந்த பயன்பாட்டினை அடைவதில்லை ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் தர்காக்கள் மற்றும் தைக்காக்கள் மட்டுமே இந்த பயன்பாட்டினை பெற்று வருகின்றனர். மாவட்டந் தோறும் இருக்கின்ற அனைத்து பள்ளிவாசல்கள் தர்காக்களில் இத்தகைய திட்டத்தை எடுத்துக் கூறி அனைத்து பள்ளிவாசல் தர்காக்களுக்கும் இந்த ரமலான் அரிசி கிடைத்திட வழி வகை செய்திட வேண்டும். இஸ்லாமிய மக்கள் விகிதாச்சாரப்படி கடந்த வருடத்தை விட அதிகப்படுத்தி ரமலான் கஞ்சிக் காண அரிசி வழங்குதலை உயர்த்த வேண்டும், இதனை நாங்கள் தமிழக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கோரிக்கை விடுத்திருந்தோம்
தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதனை உயர்த்த வேண்டும். மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி நிர்வாகம் நோன்பு பிறைக்கு (மார்ச் 1க்கு) முன்பாகவே தமிழக அரசின் விலையில்லா அரிசியினை அந்தந்த பள்ளி வாசலுக்கும் உரிய தர்காவிற்க்கும், தைக்காலுக்கும் சேர்த்திட வேண்டும், இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்படும் ஆகவே தமிழக அரசு இந்த விஷயத்தில் கடந்த வருடத்தைவிட அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment