Skip to main content

இனி கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை பிடிக்கக் கூடாது..!! போக்குவரத்து போலீசாருக்கு அதிரடி உத்தரவு..!!

இனி கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை பிடிக்கக் கூடாது..!! போக்குவரத்து போலீசாருக்கு அதிரடி உத்தரவு..!!

நாட்டில் அதிகளவு விபத்துக்கள் நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், பெரும்பாலும் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுவது என பலரும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து காவல்துறையினரும் இதை கட்டுப்படுத்த அபராதம், லைசென்ஸ் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தாலும், விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லையென்றால், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், போலீசார் கும்பலாக நின்று  சோதனையில் ஈடுபடும்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. மேலும்  போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசலும், ஏற்ப்பட்டு, பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தான், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இனி வாகன சோதனையில் ஈடுபடும்போது, போக்குவரத்து போலீசார் கும்பலாக நிற்கக் கூடாது என்றும் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு போலீஸ்காரர் மட்டுமே வாகன சோதனையின்போது இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை காவலர் மடக்கிப் பிடிக்க வேண்டும் என்றும், உதவி காவல் ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...