தி,மலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா,நலத்திட்ட உதவிகள்!
தி,மலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா,நலத்திட்ட உதவிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி தெள்ளார் கிழக்கு ஒன்றியம், மாவட்ட அம்மா பேரவை சார்பில், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்த நாள் விழா மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சி கால சாதனைகளை எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது
நிகழ்வில், மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராணி பெருமாள், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தூளி தவமணி
ஒன்றிய கழக செயலாளர்கள் டி.வி பச்சையப்பன், எம்கேஏ லோகேஷ்வரன், செய்யாறு எம்.மகேந்திரன், அருகாவூர் அரங்கநாதன், நகர கழக செயலாளர்கள் செய்யாறு வெங்கடேசன்,ஓட்டல் பாஷா, பெரணமல்லூர் மூர்த்தி துணைச்செயலாளர் ஜவகர் (எ) அறிவழகன் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் பாராசூர் பெருமாள் இசா கொளத்தூர் பெருமாள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment