வந்தவாசி உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் திறப்பு விழா!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், வந்தவாசி உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணி வேந்தன் பங்கேற்று, உழவர் சந்தையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் உழவர் சந்தையை அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இந் நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் கண்ணகி, வேளாண் துணை இயக்குனர் ஷாமிலா ஜெயந்தி, வட்டாட்சியர் பொன்னுசாமி, நகராட்சி ஆணையர் சோனியா, நகர திமுக செயலாளர் தயாளன், நகர மன்ற தலைவர் எச்.ஜலால், நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க. சீனுவாசன்,நகர மன்ற உறுப்பினர்கள் அன்பரசு,நாகூர் மீரான், வேளாண்மை அலுவலர் அர்ச்சனா, உதவி இயக்குனர் குமரன், வேளாண் விற்பனை குழு வேலன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மருதாடு சந்திரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் டி.டி. ராதா, சி.ஆர்.பெருமாள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Comments
Post a Comment