தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வந்தவாசி அருகே மாலையிட்டான்குப்பம் பகுதியில் நடைப்பெற்றது.
மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட செயலாளர் அப்துல்காதர் வரவேற்றார்.
இந் நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு எம்.வீரபத்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சுகுமார், மற்றும் இந்திய குடியரசு கட்சியின் மாநில பொறுப்பாளர் வந்தை மோகன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் பீர் முகமது மனிதநேய மக்கள் கட்சி யாசர் தாஹா பள்ளிவாசல் நிர்வாகி கலியுல் ரகுமான் முகமது யூசுப் நகர தலைவர் ஐ.மு.மு.க. அண்ணாமலை, ஆனந்தன், சேட்டு கலந்துகொண்டனர்.
இறுதியாக ஷாஜஹான் நன்றியுரை ஆற்றினார்.
Comments
Post a Comment