Skip to main content

தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய பாஜக கோரிக்கை.. மக்களவை சபாநாயகர் அமைச்சருடன் தீவிர ஆலோசனை!

தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய பாஜக கோரிக்கை.. மக்களவை சபாநாயகர் அமைச்சருடன் தீவிர ஆலோசனை!

மிழ்நாடு எம்.பி.க்களின் அமளியால் மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி அமளி செய்தனர்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இது தொடர்பாக விவாதிக்க திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்தார். ஆனால், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் திமுக கூட்டணி எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை தொடர்பான வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து இரண்டு அவைகளிலும் பங்கேற்றனர்.

"நியாயமான மறுசீரமைப்பு.. தமிழகம் போராடும்.. தமிழகம் வெல்லும்" ஆகிய வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து வந்ததால் வெளியேற செல்லுமாறு தமிழக எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்களை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவை விதிகளை மீறி தமிழக எம்.பி.க்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஆனால், வெளியேற மறுத்து தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி அமளி செய்தனர். இதனால் அவை மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, மக்களவையின் மாண்பை தமிழக எம்.பி.க்கள் குறைத்துவிட்டதாக புகார் கூறிய பாஜக உறுப்பினர்கள், தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் உடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார்.

இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையிலும் திமுக எம்.பி.க்கள் போராட அதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர் திமுக கூட்டணி கட்சிகளின் அவை தலைவர்களை தன்னை நேரில் வந்து சந்திக்க வருமாறு உத்தரவை பிறப்பித்து அவையை ஒத்திவைத்தார்.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...