அளத்துறை: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா!
திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் அளத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அளத்துறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.முருகன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ப.பரணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலர் ஏ.புவனேஸ்வரி, ஆசிரியப் பயிற்றுநர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பற்றியும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றியும் பேசினர்.பட்டதாரி ஆசிரியர் இரா.அருள்ஜோதி அனைவரையும் வரவேற்றார்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீ.ஜெயமாலினி, ரா.சந்தியா, ப.சுபஶ்ரீ, .த. வெங்கடேசன்,ச.திவ்யபாரதி உள்ளிட்ட ஆசிரிய,ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மாணவர்கள் அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் சிறப்பு அழைப்பாளர்களால் வழங்கப்பட்டது பொறுப்பு தலைமையாசிரியர் ரா.ரகுபதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
Comments
Post a Comment