தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மத நல்லிணக்க இப்தார் விழா!
வருடம் தோறும் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல் அசோசியேசன் சார்பாக சென்னையில் ரமலான் மத நல்லிணக்க இப்தார் விழா நடைபெற்று வருகிறது கடந்த பத்து வருடமாக நடைப்பெற்று வரும் இந்த இப்தார் நிகழ்வு இந்த வருடம் திருவல்லிக்கேணி ஹோட்டல் அல் நூரில், நடைபெற்றது.
இந் நிகழ்வில் தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை மேற்கு தி.மு.கழக மாவட்ட செயலாளர் சிற்றரசு, திருவல்லிக்கேணி தி.மு.கழக மேற்கு மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் , ஊடகவியலாளர் ஆர்.ஜே ஷா, திரைப்பட இசையமைப்பாளர் ரேயான், தமிழக அரசு வக்ப் வாரிய உறுப்பினர் சையது ரேஹான், நவீத், ஹசனுத்தின் , வழக்கறிஞர் சையது ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் தொடக்கமாக சென்னை மொய்தீன் அப்துல் காதர் மௌலவி ரமலான் குறித்து பயான் செய்தார்கள்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் தலைவர் நாகூர் ஹாஜி சையது முகமது கலிபா சாகிப் வரவேற்றார், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் பொருளாளர் சையது அபு மூசா காதரி நன்றி தெரிவித்தார் மேலும் விழா அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் செயலாளர் ஜாபர் அலி வெகு சிறப்பாக செய்திருந்தார்.
Comments
Post a Comment