Skip to main content

'இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை' - ப.சிதம்பரம்

'இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை' - ப.சிதம்பரம்

இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது இரு மொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை இடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுக, தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே உறுதியாக பின்பற்றப்படும் என கூறி வருகிறது. திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.

அதேநேரத்தில், புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், தனியார் பள்ளிகள் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டும் பாஜக, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் 3-வது மொழி மறுக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ப.சிதம்பரம்,

'மூன்று மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என சொல்லப்படும் இந்த நேரத்தில், நான் ஒரு விஷயத்தை மிகவும் துணிச்சலாக சொல்வேன். இந்தியாவில் எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், ஒரு மொழி கொள்கைதான் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாநிலங்களில் பொதுவான மொழியாகவும், அலுவல் மொழியாகவும், பயிற்றுவிக்கும் மொழியாகவும் இந்திதான் இருக்கிறது.

கூடுதாக வேறு ஒரு கற்பிக்கப்படுகிறது என்றால் அது சமஸ்கிருதம்தான். இது இந்தியுடன் நெருங்கிய தொடர்புடையது. தமிழ் அல்லது தெலுங்கு பேசும் ஆசிரியர்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆங்கிலம் பேசும் ஆசிரியர்களே மிகச் சில அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர்.

தமிழ்நாட்டில், மத்திய அரசு நடத்தும் 52 கேந்திரிய வித்யாலயாக்கள் உள்ளன. அங்கு பயிற்று மொழி ஆங்கிலம். அதோடு, இந்தி அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றை இப்பள்ளிகள் கற்பிக்கின்றன. அவர்கள் தமிழ் மொழியை கூட கற்பிப்பது கிடையாது. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாவில் மும்மொழிக் கொள்கை கிடையாது.

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் கட்சிகள் இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளது. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் உள்ளது.

அதேநேரத்தில், ஏராளமான தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. இந்தி படிப்பதில் இருந்து எந்த ஒரு குழந்தையும் தடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற 'தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா' உள்ளது. இதன்மூலம், லட்சக்கணக்கான மாணவர்கள் தாமாக முன்வந்து இந்தி படித்து பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர். எனவே, ஒரு குழந்தை இந்தி படிக்க விரும்பினாலும் படிக்க முடியாது என்ற நிலை இல்லை.

இங்கே எதிர்ப்பு எங்கே எழுகிறது என்றால், அரசு பள்ளிகளில் இரண்டு மொழிகள் கற்பிக்கப்படுவதில்தான். நான் இன்னும் முன்னோக்கிச் சென்று கூற விரும்புவது என்னவென்றால், இரு மொழியைக்கூட நாம் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை. கிராமப்புற குழந்தைகள், நகர்ப்புறங்களில் ஏழ்மை பின்னணி உள்ள குழந்தைகளில் எவ்வளவு பேருக்கு ஆங்கிலம் நன்றாக வருகிறது.

நான் நூற்றுக்கணக்கானோரை சந்திக்கிறேன். அவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள். ஆனால், அவர்களால் ஆங்கிலத்தில் பேச, எழுத முடிவதில்லை. எனவே, இருமொழிக் கெள்கை இருப்பது நல்லது. அந்த இரு மொழிக் கொள்கையை வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும். ஆங்கிலம் வெற்றிகரமாக கற்பிக்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது மொழி பற்றி பேசுவதற்கு முன் ஆங்கிலத்தை வெற்றிகரமாக கற்பிப்பது முக்கியம்.' என தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ப. சிதம்பரம், '2026=க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது தொகுதி மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கும். தொகுதி மறுசீரமைப்பு வரும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்குமான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகும். எங்கள் கணக்கீட்டின்படி, மாநிலங்களின் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப மறுபகிர்வு செய்யப்பட்டால், 129 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட நமது தென் மாநிலங்கள் 103 நாடாளுமன்றத் தொகுதிகளாகக் குறையும்.

5 தென் மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும். அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்கள், குறிப்பாக உ.பி., பீகார், ம.பி. மற்றும் ராஜஸ்தான் அதிக தொகுதிகளைப் பெறும். தென் மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகை விகிதத்தை குறைத்துள்ளன. வட மாநிலங்கள் இன்னும் அதனைச் செய்யவில்லை. இதை நான் குறையாக கூறவில்லை. வட மாநிலங்கள் அவ்வாறு செய்ய இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகும்.

129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதே, எங்கள் குரல்கள் நாடாளுமன்றத்தில் கேட்கப்படவில்லை. அது 103 ஆக குறைந்தால், நிலைமை மோசமாக இருக்கும். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அதேநேரத்தில், வேறு வழிகளை முன்வைத்தால் அவற்றை நாங்கள் பரிசீலிப்போம்.' எனத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...