Skip to main content

48 மணிநேரம் தான் டைம்! பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை! பஞ்சாப் விவசாயிகளுக்குஅதிரடி உத்தரவு

48 மணிநேரம் தான் டைம்! பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை! பஞ்சாப் விவசாயிகளுக்கு
அதிரடி உத்தரவு

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது.இதற்கான சரியான நேரத்துக்காக நம் நாடு காத்திருக்கிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் பஞ்சாப்பில் பாகிஸ்தானையொட்டி விவசாயிகளுக்கு எல்லை பாதுகாப்பு படையினர் 48 மணிநேரம் காலக்கெடு வழங்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு என்பது பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய தாக்குதலை இந்தியா முன்னெடுக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேடு உள்ளது. இங்கு கடந்த 22 ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தினர்.

26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதில் 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக அரபிக்கடலில் நம் நாட்டின் போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பொதுவாக ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகளின் பதில் தாக்குதலில் நம் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனால் தற்போது எல்லையோர மக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவை எடுத்து கொண்டால் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன.


இதில் ஜம்மு காஷ்மீர் மக்கள் நேற்று முதலே பதுங்கு குழிகள் தோண்டி, கோதுமை உள்ளிட்ட பயிர்களை அவசர அவசரமாக அறுவடை செய்ய தொடங்கி விட்டனர்.

இது பாகிஸ்தானுடனான மோதல் வலுவாக இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

அதோடு 48 மணிநேர காலக்கெடுவுக்குள் அதனை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதாவது பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் கோதுமை விவசாயம் செய்துள்ளனர். இந்த கோதுமையை அடுத்த 48 மணிநேரத்துக்குள் அறுவடை செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

இந்த உத்தரவு என்பது நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் மும்முரமாக பஞ்சாப்பில் அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர். பஞ்சாப்பை எடுத்துகொண்டால் பாகிஸ்தானுடன் சுமார் 530 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இந்த எல்லையோர கிராமங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கோதுமை பயிரிப்பட்டுள்ளது. இது அறுவடைக்கு தயாராகிவிட்டது.

இப்போது பாகிஸ்தானை நாம் தாக்கினால் அவர்கள் பதிலுக்கு நம்மை தாக்குவார்கள். இதனால் எல்லையோரத்தில் விவசாயம் செய்த மக்களால் அறுவடை செய்ய முடியாமல் போகும். அதோடு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதனை தடுப்பதற்காக தான் எல்லை பாதுகாப்பு படையினர் 48 மணிநேரத்தில் அறுவடை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.


அம்ரித்சார், தார்தரன், பெரோஸ்பூர், பஜில்கா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த அறிவுரை என்பது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் எல்லையோரம் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பாதைகள் கேட் போட்டு அடைக்கப்பட உள்ளது. மேலும் மோதல் அதிகரிக்கப்படும் பட்சத்தில் விவசாய நிலங்களுக்கு தற்காலிகமாக செல்ல தடை விதிக்கப்படும் என்றும் எல்லை பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபற்றி எல்லையோர கிராமமான பங்களாவில் வசித்து வரும் ரக்பீர் சிங் கூறுகையில், ''விவசாய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் எல்லையில் பதற்றமான இடங்களில் விவசாய நிலத்துக்கு செல்வது தடுக்கப்படும் என்று கூறினர். கால்நடைகளுக்கு தேவையான தீவனம் என்பது வேண்டும்.இதனால் எங்களை விவசாய பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி இன்னொரு எல்லையோர கிராமத்தை சேர்ந்த விவசாயி சுர்ஜித் சிங்பூரா கூறுகையில், ''அறுவடை பணிக்கு அதிகமான மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு இந்த வார்னிங் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள்  விரைவாக அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.


அதேபோல் பெராஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜாராய் என்ற கிராமத்தை சேர்ந்த லக்விந்தர் சிங் கூறுகையில், '' 80 சதவீத கோதுமை அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டது. இருப்பினும் வைக்கோல் சேகரிக்க முடியாத நிலை உள்ளது'' என்று கவலை தெரிவித்தார். இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையினர் கூறுகையில், ''விவசாயிகளின் சிரமங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாட்டின் பாதுகாப்பும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் முதன்மையானது. இதனால் தான் அறுவடை பணிகளை சீக்கிரமாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி பஞ்சாப் வழியாகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் - இந்தியா மோதல் வந்தால் அது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எதிரொலிக்கும். இதனால் அங்குள்ள மக்களை முன்கூட்டியே தயார் படுத்தும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...