இயல் இசை நாடக மன்றத்தின் கலைச்சங்கமம், கிராமிய கலை நிகழ்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானத்தில் இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலை சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் மாவட்டம் தோறும் கலை சங்கமும் கிராமிய கலை நிகழ்ச்சி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திர சேகர், உறுப்பினர் ,செயலர் விஜயதாயன்பன் அவர்களின் வழிகாட்டுதல் படி சிறப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி பொதுக்குழு உறுப்பினர் வி.கே வாசுதேவன் தலைமையில், ஆரணி கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணி வேந்தன் கொடி அசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சிலம்பம்,கரகாட்டம், கட்டைகூத்து ,பரதநாட்டியம்,பம்பை உடுக்கை,10 க்கும் மேற்பட்ட கலை குழுக்கள் தாங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.மேலும் ஆரணி வி.சிவா அம்மு இவர்களின் ஒருங்கிணைப்போடு, பல்வேறு நாடகக் கலைஞர்கள் மேடையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்வில், ஆரணி நகர மன்றத் தலைவர் ஏ.சி.மணி மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், துரை மாமது ,மோகன்,கே.டி ராஜேந்திரன் முள்ளிப்பட்டு ரவி மற்றும் நாடகக் கலைஞர் சு.குமணன் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருவண்ணாமலை குரு கண்ணன் நன்றியுரை ஆற்றினார்
Comments
Post a Comment