Skip to main content

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் சார்பாக, கருப்பு கொடியுடன் கண்டன ஆர்பாட்டம்!

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் சார்பாக, கருப்பு கொடியுடன் கண்டன ஆர்பாட்டம்!

புதிய வக்ஃபு சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக,  திருச்சி, தென்னூர் ஹை ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிவாசலின் வெளியே தூண்களிலும் கருப்பு கொடியை பறக்க விட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது.

வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், வக்ஃப் வாரிய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து ஜமாத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பினர் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த பேரணியில், "எச்சரிக்கிறோம் எச்சரிக்கிறோம் வக்ஃபு திருத்த சட்டத்தை எச்சரிக்கிறோம்" "வக்ஃப் வாரிய சட்டத்தை நிராகரிப்போம்", "வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்", "வக்ஃப் வாரிய சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் இருந்தனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். இதில் பல ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். இந்தப் பேரணிக்கு பின்னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் கூறும்போது;

"கோவை மாவட்டத்தில் அனைத்து ஜமாத்துக்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அனைத்து அரசியல் கட்சியினர் வக்பு திருத்தச் சட்டம் என்ற பெயரில் வக்பு சொத்துக்களை அபகரிக்கும் சட்டத்தை,கொண்டு வந்து சொத்தை அழிக்கும் பாஜக  ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தினுடைய இஸ்லாமிய அமைப்பு, மதசார்பற்ற ஜனநாயக கட்சி சார்பிலும், இந்த மாபெரும் கண்டன பேரணியையும், கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்து உள்ளோம்.

இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக, இந்த கூட்டத்தின் வாயிலாக முதலில் தமிழக அரசுக்கு இந்த சட்டத்திற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திலும், மக்களவையிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக் கொண்டு, சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்கின்ற தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு இஸ்லாமியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் பாராளுமன்றத்திலும், மதசார்பற்ற கட்சிகள் ஒட்டுமொத்தமாக இந்த சட்டத்திற்கு எதிராக இருக்கும் அனைத்து ஜனநாயக கட்சிகளுக்கு கோவை மாவட்ட இஸ்லாமியர்கள் சார்பாக, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மாபெரும் போராட்டத்தின் வாயிலாக இந்திய பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறோம். அன்பிற்குரிய பாரதப் பிரதமர் அவர்களே, ஏற்கனவே சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., முத்தலாக் திருத்த சட்டம் போன்ற பல்வேறு மத பதட்டத்தை தூண்டக் கூடிய சட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள், அந்த சட்டத்தால் இந்திய தேசத்தில் எந்த விதமான வளர்ச்சியும் வரவில்லை. சி.ஏ.ஏ சட்டத்தால் எந்த இந்துக்களும் முன்னேற்றம் அடையவில்லை. முத்தலாக் சட்டத்தால் எந்த இஸ்லாமியரும் முன்னுக்கு வரவில்லை. வேளாண் சட்டத்தால் எந்த விவசாயிகளும் முன்னுக்கு வரவில்லை. நீங்கள் கொண்டு வருகின்ற சட்டங்கள் எல்லாம் மத பதற்றத்தை தூண்டுகிறதே தவிர, குப்பையில் போடுகின்ற சட்டங்களாக உள்ளது. தயவு செய்து, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வாருங்கள்.

உதாரணமாக இன்றைக்கு அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருள்களுக்கு ஒரு அநியாய வரியை விரித்து உள்ளனர். அந்த அநியாய வரிக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வாருங்கள், ஒட்டுமொத்த இந்துக்கள் சார்பாக ஒட்டுமொத்த கிறிஸ்துவ சார்பாக ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பாக எல்லாருமே அந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரிப்பார்கள், வரவேற்பார்கள்.

முன்னேற்றத்திற்கான திட்டத்தை கொண்டு வாருங்கள். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 4 கோடி வீடு கட்டுவதாக சொன்னார்கள், இன்றைக்கு இருக்கின்ற முஸ்லிம்கள் வீடுகள் எல்லாம் இடிக்கின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்ற அரசாங்கம் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் புல்டோசர் ஓட்டக் கூடிய பயிற்சி அளித்து இஸ்லாமியர்கள் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. ஒரு புறத்தில் 4 கோடி வீடு கட்டி கொடுத்ததாக சொன்னீர்கள், இன்னொரு புறம் முஸ்லிம்களின் வீடுகளை இடித்துக் கொண்டு உள்ளீர்கள்.

பாரதப் பிரதமர் அவர்களே வளர்ச்சிக்கான திட்டத்தை கொண்டு வாருங்கள், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினர் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம். நீங்கள் கொண்டு வரக் கூடிய சட்டத்தால் இந்த நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என்பதை ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் நாங்கள் தெரியப்படுத்துகிறோம். தயவு செய்து வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கியது போன்று, எந்த பலனும் இல்லாத இந்த வகஃப் திருத்த சட்டத்தை தயவுசெய்து வாபஸ் வாங்குமாறு இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக கோரிக்கையாக வைக்கிறோம்" என்றனர்.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...