Skip to main content

ஒன்றிய பாஜக அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய பாஜக அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை மாவட்டம் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் எதிரே நேற்று மாலை நடைபெற்றது 

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமைமை தாங்கினார். தேசிய மகளிரணி தலைவர் ஏ.எஸ்.பாத்திமா முசாபர் துவக்க உரையாற்றினார்.

மாவட்டத் தலைவர்கள் மடுவை எஸ்.பீர் முஹம்மது, கமுதி பி.சம்சுதீன், ஏ.ஹெச். முஹம்மது இஸ்மாயில், யூசுப் குலாம் முஹம்மது, மாவட்டச் செயலாளர்கள் எம். முஹம்மது அபூபக்கர், எம்.என்.எம். இர்பான் சுபேர், கே.கோதர்ஷா, முஸப்பர் அகமது, மாவட்ட பொருளாளர்கள் கௌஸ்பேக், ஏ.எம்.என். காசிம், எம்.சுலைமான் மன்பஈ, எஸ்.ஏ. மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழக பிரச்சார அணி செயலாளர் அருள்மொழி, ஜமாஅத்துல் உலமா மாநில துணை பொதுச்செயலாளர் கா.மு. இலியாஸ் ரியாஜி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி, பி.அப்துல் காதர், ஹெச்.ருமைஜுல்லாஷாஸ் பைஜி, ஏ.எம்.ஜெய்தூன், எஸ்.எம். ஆலம்கான், மஹபூப் ஷெரீப், வழக்கறிஞர் தஸ்லிம் ஆலிப், மாணவரணி தேசிய பொதுச்செயலாளர் எஸ்.ஹெச். முஹம்மது அர்ஷத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது:
"வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றினார். அது மட்டுமல்லாமல் திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் வக்பு சட்டத்துக்கு எதிராக ஒங்கி ஒலிக்க செய்தார். பாராளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சியினர் அனைவரும் இந்த சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளனர். இது தான் வரலாறு. உச்சநீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்ட மசோதா தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் 95 சதவீதத்திற்கும் அதிகமானோரிடம் கருத்து கேட்டதாக உண்மைக்கு மாறாக பேசியுள்ளார். இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆண்களும், பெண்களும், விதிக்கு வந்து போராட தொடங்கியுள்ளனர். நீதிபதிகள் இந்த சட்டத்தில் உள்ள ஒட்டைகளை தெரிந்து கொண்டு வக்பு வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க கூடாது என்று அதிரடி உத்தரவு வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பை எப்போதும் முஸ்லிம்கள் மதிப்பார்கள். எனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பில் வெற்றி பெறுவோம். அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...