கோவை தொண்டாமுத்தூர் எஸ்.டி.பி.ஐ யின் சார்பில்,வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதியின் சார்பில், கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்குட்பட்ட உக்கடம் அன்புநகர் பகுதி முழுவதும், வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைப்பெற்றது
அன்புநகரில் 10-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் நேற்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அன்புநகர் நுழைவாயில் முன்பு, அன்புநகர் பகுதி மக்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் முகமது காசிம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல்ஹமீத், மாவட்ட செயலாளர் உமர் பாரூக், மாவட்ட பொருளாளர் மன்சூர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கையில் கருப்புக் கொடி ஏந்தி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்பு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள 500"க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியானது ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் சாலைகளிலும் கருப்பு கொடியினை ஏற்றிய எஸ்டிபிஐ கட்சியினர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் கருப்பு கொடி ஏந்தியபடி மனித சங்கிலி மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர், வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்த அவர்கள், மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
Comments
Post a Comment