Skip to main content

திமுகவோடும் கொள்கை எதிரி பாஜகவோடும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா

திமுகவோடும் கொள்கை எதிரி பாஜகவோடும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா

திமுக வோடும் கொள்கை எதிரி பாஜக வோடும் கூட்டணி இல்லை என்பதில்  உறுதியாக இருக்கிறோம் என தமிழக வெற்றிக் கழக  அரசியல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார் இது சம்பந்தமாக  செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

'வக்பு சட்டத்திருந்த மசோதாவுக்கு எதிராகத் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்றோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. கேரள சிஐஏ க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதே மாதிரி தமிழக அரசும் வக்பு திருத்தச் சட்டத்துக்காக வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.

இதை திருமாவளவனும் கம்யூனிஸ்ட்களும் தமிழக அரசுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும். இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறும் வகையிலான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு, அரசியலமைப்புச் சட்டத்துடன் சம்பந்தப்பட்டது.

தனிமனிதர்கள் வழக்கு தொடுத்தால் அரசியல் லாபங்கள் இருக்குமோ என நீதித்துறை கருதக்கூடும். ஆனால், அரசு சார்பில் வழக்குத் தொடுக்கும் போது இன்னும் வலுவான வாதங்களை முன் வைக்க முடியும். வலுவாக போராட முடியும். ஆர்ப்பாட்டம் செய்யலாம், மீடியா முன்பாக பேசலாம். ஆனால், தீர்வு என்ன? திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத்திருத்ததுக்கு எதிராக பேசியதை வரவேற்கிறோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதே தீர்வு.

சிபிஐ விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய வழக்கில் திமுகவுக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது? ஆனால், நாங்கள்தான் காரணம் என விளம்பரம் மட்டுமே செய்துகொள்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டி விவகாரத்தின்போது உதயநிதி 15 நாட்களுக்கு ஆளே காணவில்லை. எதாவது பிரச்னையென்றால் மும்மொழிக் கொள்கை மாதிரியான விஷயங்களைக் கையிலெடுத்து பிரச்னையை மடைமாற்றி விடுவார்கள்.

திருமாவளவனை நாங்கள் தாக்கவில்லை. திருமாவளவன் வேங்கை வயலுக்கு சென்றார். மக்களை சந்தித்தார். அந்த விவகாரத்தின்போது இந்த அரசை திருமாவளவன் நம்பினார். ஆனால், இந்த அரசு வேங்கைவயலில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை ஏற்படுத்தியது. திருமாவளவன் அண்ணன் மீண்டும் வேங்கைவயலுக்குச் செல்ல நினைக்கும்போது உளவுத்துறை மூலம் அவரை செல்லவிடவில்லை. இதைத்தான் நாங்கள் கேள்வி கேட்டோம்.

திமுக சமூகநீதிக்கான அரசு என திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். காவல்துறையின் தோல்வியால் சாதிய மோதல்கள் உண்டாகிறது எனில் அரசியல் தலைமையைத்தான் கேள்வி கேட்க வேண்டும். தலைவர் விஜய்யுடன் பேசி வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் பேசுகிறோம். அரசியல் எதிரி திமுகவோடும் கொள்கை எதிரி பாஜகவோடும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அதிமுக பாஜகவுடன் சேர்ந்தவுடனேயே அது தவறு என நாங்கள் அறிக்கை கொடுத்துவிட்டோம். மக்களே அதிமுகவுக்கு தண்டனை கொடுத்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்? ஊழலை மறைப்பதற்காக சமூகநீதியையும் பாஜக எதிர்ப்பையும் திமுக பேசுகிறது. `அடங்க மறு', `திமிறி எழு' என்கிற திருமாவளவன் அண்ணனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். வன்னியர்களுக்கான மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கும்போது தலித்துகளுக்கான ஆர்ப்பாட்டம் செய்ய ஏன் அனுமதி கொடுப்பதில்லை?

திமுகவை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. கம்யூனிஸ்ட் கட்சிகளே தங்களின் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் சென்றே அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. கூட்டணி கட்சிக்கே இதுதான் நிலைமை. திமுகவுடன் உளவுத்துறைதான் விஜய் எங்கே செல்கிறார் என்பதை லீக் செய்கிறது.

கோவையில், நாங்கள் ரோடு ஷோவுக்குத் திட்டமிடவில்லை. உள்ளுர் போலீஸ்தான் விஜய்யை வேன் மீது ஏறி நின்று செல்லச் சொன்னது.' என்றார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...