Skip to main content

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில்  அதிகரித்து வரும் கொரோனா தொற்று! 

இந்தியாவிலும் அச்சுறுத்தும் அளவுக்கு இல்லையென்றாலும், கவனிக்கத் தக்க வகையில் நோய் பாதிப்பு பதிவாகி வருகிறது.

குறிப்பாக மும்பை, சென்னை, அகமாதாபாத் நகரங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முக்கிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் மிகவும் சிக்கலான அதாவது உடலுறுப்பு மாற்று சிகிச்சை, பைபாஸ் அறுவைசிகிச்சை, இதய நாள மாற்று அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் தள்ளிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மும்பையில் மே மாதத்தில் மட்டும் 95 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பே வெறும் 106 தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தற்போது 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கடுமையான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புனே வில், இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையிலும் கூட, முக்கியமான சில மருத்துவமனைகளில் கொரோனா பிரிவு தொடங்கப்பட்டுவிட்டது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நலமாக இருப்பவர்கள் வெளி நோயாளியாகவே சிகிச்சை பெற்று வருவதாகவும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கோடைக் காலம் தொடங்கிய பிறகும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை. கடந்த வாரங்களில் பருவக்கால தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது காய்ச்சல் பாதித்து வருபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில், பருவகால தொற்றுகளின் காரணமாக காய்ச்சல் பாதித்து வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அதாவது, இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை காய்ச்சலுக்கான காரணமாக தொற்று ஏ அல்லது பி-ஆக இருந்து வந்த நிலையில் தற்போது காய்ச்சல் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா முற்றிலும் அழிந்துவிடவில்லை. அது பரவிக்கொண்டே இருக்கிறது. பருவநிலைக்கு ஏற்ப அதன் பரவல் விகிதம்தான் மாறுபடுகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கர்நாடகத்திலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஒரு மாதத்துக்கு ஒருவருக்குத்தான் உறுதி செய்யப்படும். கொரோனா பாதித்திருக்கும் 7 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று முடியவில்லை என்றும், உலகம் முழுவதும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தியாவில் பெரும்பாலும் கொரோனா பாதிப்பு மிதமாக உள்ளது. இதுவரை ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலையோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வயதானவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கொரோனா தொற்று பரவலுக்கான அடிப்படை முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...