திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
டெல்டா மாவட்டங்களில் பகல் நேர வெப்ப நிலையானது தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகி வருகிறது.
இன்றைய தினம் சென்னை மீனம்பாக்கம், மதுரை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சதமடித்துள்ளது. வேலூர், கடலூர், நாகை, தஞ்சை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
இந்நிலையில், இன்று இரவு நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment