கொரோனா தொற்று 5,346 ஆக உயர்வு அதிகபட்சமாக கேரளாவில் 1,684 பேர் பாதிப்பு!
2025 ஜூன் 5ஆம் தேதியான நேற்று 4,866ஆக இருந்த கொரோனா பாதிப்பு ஜூன் 6 ஆம் தேதியான இன்று 500 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,346 ஆக உயர்ந்ததுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 1,684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 597 பேரும், கர்நாடகாவில் 451 பேரும், மேற்கு வங்கத்தில் 596 பேரும், உத்தர பிரதேசத்தில் 2025 பேரும், ராஜஸ்தானில் 107 பேரும், குஜராத்தில் 615 பேரும், டெல்லியில் 592 பேரும், ஆந்திராவில் 62 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஜூன் 5ஆம் தேதியான நேற்று வரை 221 ஆக இருந்த நிலையில், தற்போது 330 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் 2025 ஜனவரியில் இருந்து இதுரை 55 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
அவற்றில் 53 பேர் கடந்த 15 நாட்களில் உயிரிழந்தனர்.
டெல்லி 2 பேரும், கேரளாவில் 2 பேரும், கர்நாடக, பஞ்சாபில் தலா ஒருவரும், மகாராஷ்டிராவில் 17 பேரும் உயிரிழந்துள்ளனர். 2025 மே மாதத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் பரவிய கொரோனா தொற்று, தற்போது இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 4 புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 தொடர்களைச் சேர்ந்தவை என ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment