வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில், புதிய பேருந்து நிலைய நகராட்சி பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்வு நடைபெற்றது.
எக்ஸ்னோரா கிளைத் தலைவர் மலர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு நகரமன்றத் தலைவர் எச்.ஜலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கச் செயலாளர் ம.ரகுபாரதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் பா.இந்திரராஜன் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் எஸ்.குமார் ஆகியோர் பங்கேற்று சுற்றுச்சூழல் தின சிறப்புரை ஆற்றினர்.
மேலும் பூங்காவில் ஆங்காங்கு மரக்கன்றுகள் நடப்பட்டது. இந் நிகழ்வில் சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி நகர மன்ற உறுப்பினர் ராமஜெயம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, சமூக ஆர்வலர் வி. விஜயகுமார், துணைத் தலைவர்கள் பா. சீனிவாசன், கேப்டன் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, தென்னாங்கூர் ரஜினி மண்ணிசை பாடல்கள் பாடப்பட்டது.
உடன் எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்வை சங்க ஆலோசகர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். இறுதியில ஒருங்கிணைப்பாளர் க. பூபாலன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment