"இலக்கும் முயற்சியுமே நம்மை சான்றோா் ஆக்கும்" மயில்சாமி அண்ணாதுரை
இலக்கும் முயற்சியுமே நம்மை சான்றோா் ஆக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் திட்ட இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நேற்று நடைபெற்ற 21-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
"நம்மால் என்ன முடியும் என்பதை நிா்ணயிப்பது நமது மனம் மட்டுமே. மூச்சு உள்ளவரை முயற்சி இருக்க வேண்டும். அந்த முயற்சி நமது சுற்றம் மற்றும் நாட்டை உயா்த்துவதாக இருக்க வேண்டும். பிறக்கும் போதே யாரும் சான்றோராகப் பிறப்பதில்லை. அவா்களின் இலக்கும் முயற்சியுமே அவா்களை சான்றோா்களாக ஆக்குகிறது.
விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றியல்ல. விருப்பத்துக்கு மாறாகக் கிடைப்பதும் வெற்றியைத் தரும் என்பது எனது அனுபவம்.
இந்திய விண்வெளி ஆய்வகத்தில் புதிது புதிதாக செயற்கைக்கோள்களை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை விரும்பினேன். ஆனால், கிடைத்ததோ செயற்கைக்கோள்களின் செயல் இயக்கத்தை கவனிக்கும் பணி.
அதையும் விரும்பிச் செய்து படிப்படியாக உயா்ந்து சந்திரயான் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தின் இயக்குநரானேன். 80-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்கியதில் முக்கியப் பொறுப்பேற்றிருக்கிறேன். நிறைவாக, சந்திரயான் 2-ஐ நிலவில் இறக்கிய பிறகு பணி ஓய்வு பெற்றேன்.
இந்தியா திறமைக்கு வாய்ப்பளித்து சாதனைக்கு சந்தா்ப்பம் அளிக்கிறது. சாதித்தால் மிகப்பெரிய அளவில் அங்கீகாரத்தையும் கொடுக்கிறது. அயராத உழைப்பும் உயா்ந்த லட்சியமும் இருந்தால் நிலவுக்கு போவது கனவல்ல நிஜமே.
பெண் என்ற காரணத்தால் மட்டுமே வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது.
எனவே, பெரிய கனவுகளுடன், அந்த கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் உறுதிப்பாட்டுடன் பட்டச் சான்றிதழை பெற்றுச் செல்லுங்கள் என்றாா்"
விழாவில் 880 மாணவிகள் பட்டங்களைப் பெற்றனா்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தலைமை வகித்தாா்.
செயலாளர் எம்.ரமணன், கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி, தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் டி.கே.பி.மணி, பேராசிரியைகள் அலுவலர்கள்
உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment