Skip to main content

நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார்

நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார்

நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார்

நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் தர்காவில் இந்த வருடம் மிகச்சிறப்பான முறையில் 

சுதந்திர தின ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மாண்புமிகு நீதிமன்ற உத்தரவுப்படி நாகூர் தர்காவிற்க்கு புதிய நிர்வாகம் கடந்த ஏப்ரல் முதல் அமைந்துள்ளது. அதன்படி நாகூர் தர்கா நிர்வாகத்தை ஸ்கீம் படி போர்டு ஆப் டிரஸ்டிகள் நிர்வாகித்து வருகின்றனர்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழும் 465 வருட பாரம்பரியமிக்க நாகூர் தர்கா பெரிய மினராவில் தேசிய கொடி மின்னொளி அமைக்கப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்றது

நேற்று நாகூர் தர்கா அலுவலக முகப்பில் நாகூர் தர்கா அலங்கார வாசலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, முதன் முறையாக சுதந்திர தின விழா அன்னதான நிகழ்வு நடைப்பெற்றது

நாகூர் தர்கா அலங்கார வாசலில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்விற்க்கு தலைமையேற்ற, தர்கா ஆலோசனைக் குழு தலைவர்  செய்யது முஹம்மது கலீபா சாஹிப் வரவேற்புரையாற்றினார்.

நாகூர் ஆண்டகை – குஞ்சாலி மரைக்காயர் – போர்ச்சுக்கல் படை வெற்றி குறித்து பேசினார்,

பின்னர் தர்கா டிரஸ்டி சேக் ஹசன் சாஹிப் அனைவருக்காகவும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் புனித துவா ஓதினார்.

பின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் தேசிய கொடி ஏற்றினார். தேசிய கொடிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர் சிறப்பு விருந்தினர் நாகூர் காவல் ஆய்வாளர் சிவராமன் அன்னதான நிகழ்வினை துவக்கி வைத்து அனைவருக்கும் உணவு வழங்கினார். சுமார் 600 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்திய சுதந்திர தினத்தன்று முதன்முறையாக நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக இந்த  அன்னதான நிகழ்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்வில் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் அபுல் பதஹ் சாஹிப், சுல்தான் கபீர் சாஹிப், ஹாஜா முஹைய்னுதீன் சாஹிப், முஹம்மது பாக்கர் சாஹிப், செய்யது யூசுப் சாஹிப், ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜலீல் சாஹிப், நாகூர் நகர காஜி ஜான் சாஹிப், தர்கா ஆதீனஸ்தர்கள் செய்யது மீரான் சாஹிப், சுல்தான் சாஹிப், தம்பி சாஹிப், சமீர் சாஹிப், அபு சாஹிப், கரிமுல்லா சாஹிப், சாபுனி சாஹிப், சாதிக் சாஹிப், உள்ளிட்ட நாகூர் தர்கா சாஹிப்மார்கள் நாகூர் நவ்சாத், சர்புதீன்,தர்காஅலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...