நாகூர் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

நாகூர் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!
நாகப்பட்டினம்:
நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பேரணியில் மாணவ மாணவிகளுடன் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நெளஷாத், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் காமில் சாஹிப், நாகை நகரமன்ற உறுப்பினர் நத்தர், கௌதியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் மற்றும் தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகூர் தர்கா அலங்கார வாசலில் ஆலோசனைக் குழு தலைவரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான கலீபா சாஹிப் போதை ஒழிப்பு சம்பந்தமாக மாணக்கர்களிடம் சிறப்புரையாற்றினார்.
பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு கோஷமிட்டனர். நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.
Comments
Post a Comment