Skip to main content

பாஜகவின் அழுத்தம் கூடாது பெட்ரோல் குண்டு வீச்சில் போலீஸ் தீர விசாரிக்கணும் பிஎப்ஐ வலியுறுத்தல்

பாஜகவின் அழுத்தம் கூடாது பெட்ரோல் குண்டு வீச்சில் போலீஸ் தீர விசாரிக்கணும் பிஎப்ஐ வலியுறுத்தல்

பாஜகவின் அழுத்தம் கூடாது பெட்ரோல் குண்டு வீச்சில் போலீஸ் தீர விசாரிக்கணும் பிஎப்ஐ வலியுறுத்தல்

சென்னை: ‛‛பிஎப்ஐ, எஸ்டிபிஐ 
அமைப்புகள் ஒருபோதும் வன்முறையை கையில் எடுக்காது.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக போலீசார் பாஜகவின் அழுத்தத்துக்கு ஆளாகாமல் தீர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது சேக் அன்சாரி கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 3 நாட்களாக கோவை, ஈரோடு, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.

பாஜக அலுவலகம், அக்கட்சி பிரமுகர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தை தொடர்ந்து கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

கோவை புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரின் வீட்டிலும் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

ஈரோடு-சென்னை-மதுரை
ஈரோட்டிலும் ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது.

அதன்பிறகு நேற்று இரவு சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாம்பரம் பகுதி மாவட்ட தலைவராக உள்ளார்.

இவரது வீடு மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதன்பிறகு நேற்று இரவு மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணனின் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

சேலத்தில் மண்ணெண்ணெய் குண்டு
இதன் தொடர்ச்சியாக சேலம் பொன்னம்மாபேட்டை பகுதி ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுதெடாடர்பாக காதர் உசேன், சையத் அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இஸ்லாமிய அமைப்பினர் இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றன.

இந் நிலையில்  சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது சேக் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில்:

“ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு உறுதுணையாகவும், ஆதரவாக உள்ளது.

இதனை கெடுப்பதற்காகவும், மாநில அரசுக்கு எதிராக சட்டம்-ஒழுங்கை சீரழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதில் காவல் துறை அதிகாரிகள் தெளிவான புரிதல் கொள்ள வேண்டும்.

தெளிவான விசாரணை
உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பாஜகவின் அழுத்தத்துக்கு ஆளாகி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். அழுத்தத்துக்கு பயந்து காவல்துறை விசாரிக்க கூடாது. அசம்பாவித சம்பவங்களின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது பற்றி காவல்துறை தெளிவான விசாரணை நடத்த வேண்டும்.

அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் பிஎப்ஐ, எஸ்டிபிஐ வன்முறையை ஒருபோதும் கையில் எடுக்காது” என்றார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...