Skip to main content

நாகை: நாகூர் தர்கா 466 வது வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம்!

நாகை: நாகூர் தர்கா 466 வது வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம்!

நாகை: நாகூர் தர்கா 466 வது வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம்! 

நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற, நாகூர் தர்கா வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சையதினா அப்துல் காதர் ஷாகுல்அமீது பாதுஷா நாயகத்தின்  466 வது கந்தூரி விழா வரும்  டிசம்பர் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜனவரி 6 ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதன்படி நேற்று மாலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நாகூர் தர்கா 466 வருட கந்தூரி ஏற்பாடு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விழா ஏற்பாடு சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில்
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்

அப்போது அவர் பேசுகையில்:

“உலகம் போற்றும் நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகளில் தான் பங்கேற்பதை பாக்கியமான கருதுகிறேன் கடந்த வருடத்தைவிட மிகச்சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகின்றேன்” என கூறினார். மேலும் விழாக்குழுவினர் கோரிக்கைக்கு உடனடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

தொடர்ந்து நாகை நகராட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் முடக்கிவிடப்பட்டன. யாத்ரீக பெருமக்களின் நலனிற்காக துப்புரவு பணிகள் மற்றும் சுற்றுபுர சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாக  தங்களது நடவடிக்கை பட்டியலை மாவட்ட ஆட்சியர் முன் வாசித்தனர்.

நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக ஆலோசனை குழு தலைவர் முஹம்மது கலீபா சாஹிப் பேசுகையில்:

“நாகூரெங்கும் மொபைல் டாய்லட் வசதி செய்திடவும், நாகூர் தர்கா கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கழிவறையை உடனே பயன்பாட்டிற்க்கு விடவும், யாத்ரீகர்களுக்கு பேட்டரி கார்  வசதி செய்திடவும், தர்கா குளத்தில் தற்போது தண்ணீர் அளவு அதிகமாக இருப்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறும் நாகூர் தர்காவை சுற்றி போக்குவரத்திற்க்கு இடையூரான கடைகளை அப்புறப்படுத்துதல் வேண்டும் என்றும் நாகூர் தர்கா கந்தூரிக்கு எதிரான பிராச்சாரம் மற்றும் கூட்டம் நடத்த தடைவிதித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்றும் கேட்டு கொண்டார்.

நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் காமில் சாஹிப் பேசுகையில்:

“நாகூர் தர்கா அலங்கார வாசல்,  ரயில் நிலையம், பேருந்து நிலையம், நாகூர் தர்கா கிழக்கு வாசலில் புதிய ஹைமாஸ் விளக்குகள் அமைத்திடவும், நாகூரில் பிளாஸ்டிக் பை உபயோக தடை – விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திடவும் , கடந்த வருடத்தில் நகராட்சியின் கார் பார்க்கிங் கட்டணத்தை நாகூர் தர்கா கந்தூரி 14 நாட்கள் ரத்து செய்தல் போன்று இந்த வருடமும்  செய்திட வேண்டும் என்றும் நாகூர் முழுவதும் தடையில்லா மின்சாரம் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் நகராட்சி சார்பாக குடி தண்ணீர்க்காக தற்காலிக அடிபைப்புக்கள் அமைத்தல் வேண்டும் என்றும் நாகை கடற்கரை லைட் ஹவுஸினை நாகூர் கந்தூரிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவசமாக திறந்துவிடுதல் வேண்டும் என்றும் நாகூரின் மீதமுள்ள நூல்கடை தெரு, குஞ்சாலி மீயர் தெருவிற்க்கு உடனடி சாலை அமைத்தல் வேண்டும் என்றும் கொடி ஊர்வலம், சந்தனக்கூடு ஒழுங்குமுறை படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் நாகூரில் ஆட்டோ கட்டணங்களை ஒழுங்குபடுத்தவேண்டும் என்றும் நாகூரில் தெருக்களில் சுற்றி திரிந்து பொதுமக்களுக்கு அசாம்பவிதம் ஏற்படுத்தும் நாய், மாடுகளை நகராட்சி உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் “என கோரினார்.

அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று இந்த வருட கந்தூரிவிழாவை சிறப்பாக நடத்திட ஆவணம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர்,  வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தொலைதொடர்பு அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள்,மின்துறை அதிகாரிகள், மற்றும் டிரஸ்டி சுல்தான் கலீபா சாஹிப், தர்கா மேலாளர் ஜெகபர் ஹூசைன், செயல் அலுவலர் ராஜேந்திரன் , நாகப்பட்டிணம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...