நாகை: நாகூர் தர்கா 466 வது வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம்!

நாகை: நாகூர் தர்கா 466 வது வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம்!
நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற, நாகூர் தர்கா வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சையதினா அப்துல் காதர் ஷாகுல்அமீது பாதுஷா நாயகத்தின் 466 வது கந்தூரி விழா வரும் டிசம்பர் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜனவரி 6 ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதன்படி நேற்று மாலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நாகூர் தர்கா 466 வருட கந்தூரி ஏற்பாடு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விழா ஏற்பாடு சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில்
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்
அப்போது அவர் பேசுகையில்:
“உலகம் போற்றும் நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகளில் தான் பங்கேற்பதை பாக்கியமான கருதுகிறேன் கடந்த வருடத்தைவிட மிகச்சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகின்றேன்” என கூறினார். மேலும் விழாக்குழுவினர் கோரிக்கைக்கு உடனடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
தொடர்ந்து நாகை நகராட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் முடக்கிவிடப்பட்டன. யாத்ரீக பெருமக்களின் நலனிற்காக துப்புரவு பணிகள் மற்றும் சுற்றுபுர சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாக தங்களது நடவடிக்கை பட்டியலை மாவட்ட ஆட்சியர் முன் வாசித்தனர்.
நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக ஆலோசனை குழு தலைவர் முஹம்மது கலீபா சாஹிப் பேசுகையில்:
“நாகூரெங்கும் மொபைல் டாய்லட் வசதி செய்திடவும், நாகூர் தர்கா கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கழிவறையை உடனே பயன்பாட்டிற்க்கு விடவும், யாத்ரீகர்களுக்கு பேட்டரி கார் வசதி செய்திடவும், தர்கா குளத்தில் தற்போது தண்ணீர் அளவு அதிகமாக இருப்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறும் நாகூர் தர்காவை சுற்றி போக்குவரத்திற்க்கு இடையூரான கடைகளை அப்புறப்படுத்துதல் வேண்டும் என்றும் நாகூர் தர்கா கந்தூரிக்கு எதிரான பிராச்சாரம் மற்றும் கூட்டம் நடத்த தடைவிதித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்றும் கேட்டு கொண்டார்.
நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் காமில் சாஹிப் பேசுகையில்:
“நாகூர் தர்கா அலங்கார வாசல், ரயில் நிலையம், பேருந்து நிலையம், நாகூர் தர்கா கிழக்கு வாசலில் புதிய ஹைமாஸ் விளக்குகள் அமைத்திடவும், நாகூரில் பிளாஸ்டிக் பை உபயோக தடை – விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திடவும் , கடந்த வருடத்தில் நகராட்சியின் கார் பார்க்கிங் கட்டணத்தை நாகூர் தர்கா கந்தூரி 14 நாட்கள் ரத்து செய்தல் போன்று இந்த வருடமும் செய்திட வேண்டும் என்றும் நாகூர் முழுவதும் தடையில்லா மின்சாரம் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் நகராட்சி சார்பாக குடி தண்ணீர்க்காக தற்காலிக அடிபைப்புக்கள் அமைத்தல் வேண்டும் என்றும் நாகை கடற்கரை லைட் ஹவுஸினை நாகூர் கந்தூரிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவசமாக திறந்துவிடுதல் வேண்டும் என்றும் நாகூரின் மீதமுள்ள நூல்கடை தெரு, குஞ்சாலி மீயர் தெருவிற்க்கு உடனடி சாலை அமைத்தல் வேண்டும் என்றும் கொடி ஊர்வலம், சந்தனக்கூடு ஒழுங்குமுறை படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் நாகூரில் ஆட்டோ கட்டணங்களை ஒழுங்குபடுத்தவேண்டும் என்றும் நாகூரில் தெருக்களில் சுற்றி திரிந்து பொதுமக்களுக்கு அசாம்பவிதம் ஏற்படுத்தும் நாய், மாடுகளை நகராட்சி உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் “என கோரினார்.
அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று இந்த வருட கந்தூரிவிழாவை சிறப்பாக நடத்திட ஆவணம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தொலைதொடர்பு அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள்,மின்துறை அதிகாரிகள், மற்றும் டிரஸ்டி சுல்தான் கலீபா சாஹிப், தர்கா மேலாளர் ஜெகபர் ஹூசைன், செயல் அலுவலர் ராஜேந்திரன் , நாகப்பட்டிணம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment