அரசியல் நாகரீகமற்று தலைக்கனத்துடன் பேசிய அண்ணாமலைக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் – எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ
அரசியல் நாகரீகமற்று தலைக்கனத்துடன் பேசிய அண்ணாமலைக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் – எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ

அரசியல் நாகரீகமற்று தலைக்கனத்துடன் பேசிய அண்ணாமலைக்கும் பாஜகவிற்கும் மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் – எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ
தஞ்சாவூர்:
கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டையில், ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளிக்கு மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேவையான 15 பென்ச், 15 டெஸ்க், 3 வட்ட மேசைகள், 20 நாற்காலிகள் ஆகியவற்றை தனது பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கினார்.
இதே போன்று இத்தொகுதிக்குட்பட்ட சுந்தரபெருமாகோயில், நாகக்குடி, வளையப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கும் தேவையான ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்களை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா,
‘அரசியலில், அநாகரீகமான போக்கை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடைபிடிக்கிறார்.
அண்ணாமலை தலைக்கனம் மிகுந்து உள்ளார்.
கடலூர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களை பொது அரங்கில் பேச தயங்கும் வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் அநாகரீகமாக வர்ணணை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
பாஜக மற்றும் அண்ணாமலையின் நடவடிக்கைகளை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். அவர்கள் பாஜகவிற்கும், அண்ணாமலைக்கும், தகுந்த நேரத்தில் ஜனநாயக ரீதியில் தக்க பதிலடி தருவார்கள் ‘என தெரிவித்தார்.
Comments
Post a Comment