செய்யாறு: வெம்பாக்கம் தூசி மாமண்டூா் ஏரி பாசனத்துக்காக திறப்பு!

விவசாய பாசனத்துக்காக தூசி மாமண்டூர்
ஏரியிலிருந்து நேற்று தண்ணீா் திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ளது தூசி மாமண்டூா் ஏரி.
தூசி உள்வட்டத்தைச் சோ்ந்த 18 கிராமங்கள் பயன்பெறும் இந்த ஏரியின் கொள்ளளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும், தற்போது சம்பா பருவத்துக்கான விவசாய நடவு பணிகளைத் தொடங்க ஏரியின் 4 -ஆவது மதகு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் டி.ராஜி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன், காஞ்சிபுரம் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் நீள்முடியோன், இளநிலைப் பொறியாளா் மாா்க்கண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி பங்கேற்று 4-ஆவது மதகின் ஷட்டரை பூஜைகள் செய்து நீரை திறந்து வைத்து மலா் தூவினாா்.
இந் நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் க.லோகநாதன், ஒன்றியச் செயலாளர்கள், என்.சங்கா், எம்.தினகரன், ஏ.ஞானவேல், சி.கே.ரவிக்குமாா், மற்றும் அனக்காவூா் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment