Skip to main content

டெல்லி: மனீஷ் சிசோடியா கைது ஆம் ஆத்மிக்கு இக்கட்டான சூழல்!

டெல்லி: மனீஷ் சிசோடியா கைது  ஆம் ஆத்மிக்கு இக்கட்டான சூழல்!


நேற்று முன்தினம் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

டெல்லி முதலமைச்சராக மட்டுமின்றி கல்வி, நிதி, கலால் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். எனவே, அவரின் கைது ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அவர்கள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்.

மனீஷ் சிசோடியாவை போன்று, டெல்லி அமைச்சர்களுக்குள் ஒருவரான சத்யேந்தர் ஜெயினை கடந்தாண்டு மே மாதம், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, சிறையிலடைத்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் உள்ளார்.

அவர் சிறையில் இருந்து வந்த நிலையிலும், டெல்லியின் சுகாதாரம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

இந் நிலையில், கைதான சத்யேந்தர் சிங், மனீஷ் சிசோடியா ஆகிய இருவரும் இன்று தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் இருவரின் ராஜினாமாவையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.

தற்போது, இருவரின் ராஜினாமாவை அடுத்து, ஆம் ஆத்மிக்கு மற்றொரு சோதனை காத்திருக்கிறது எனலாம்.

கைதான முக்கிய தலைவர்கள் இருவருக்கும், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் சிறை தண்டனை கொடுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இது டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மிக்கு கூடுதல் அழுத்ததை அளிக்கலாம். தற்போது, டெல்லி உள்ளாட்சி ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், எதிர்கட்சியான பாஜக தரப்பில் கடும் நெருக்கடி உருவாகலாம் என கூறப்படுகிறது.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் துறைகள், டெல்லி அமைச்சர்களாக உள்ள கைலாஷ் கெஹ்லோட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் ஆகியோருக்கு வழங்கப்படலாம்.

புதிய அமைச்சர்கள் யாரும் பதவியேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், அது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, டெல்லி துணைநிலை ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வந்தது.

அதன்படி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டும், விசாரிக்கப்பட்டும் வரும் நிலையில், ஏற்கெனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

நேற்றைய தினம் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு ஐந்து நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சிபிஐ அதிகாரிகளால் இன்று காலை முதல் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான் சிபிஐ-ன் கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மணிஷ் சிசோடியா தரப்பு கோரிக்கை வைத்தது.

இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, இன்றைய தினமே மனு மீது விசாரணையை நடத்துவதாக அறிவித்திருக்கிறது. 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...