அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை உள்பட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.
அதேபோல அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்தது.
இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர காவல் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளை ஒதுக்கியதாகவும், தனது மகன் கௌதம சிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது.
இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது.
இதனை அடிப்படையாக கொண்டு சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பைகளில் ஆவணங்களை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
இதன் பின்னர் பொன்முடி சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவரது காரிலேயே அழைத்து சென்றனர்.
விசாரணைக்கு பின்னர் அதிகாலை 3 மணி அளவில் அமைச்சர் பொன்முடி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment