Skip to main content

மணிப்பூர்: தனி நிா்வாகம், குடியரசுத் தலைவா் ஆட்சி: இந்தியா கூட்டணிக்கு மணிப்பூா் பழங்குடிகள் கடிதம்

மணிப்பூர்: தனி நிா்வாகம், குடியரசுத் தலைவா் ஆட்சி: இந்தியா கூட்டணிக்கு மணிப்பூா் பழங்குடிகள் கடிதம்

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், குகி-ஜோ பழங்குடிகளுக்கென்று தனி நிா்வாகம் வேண்டும் என்ற தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி, எதிா்க்கட்சிகள் கூட்டணியான ‘இந்தியா’வுக்கு பழங்குடிகள் கடிதம் எழுதியுள்ளனா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி, சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினா் இடையே நிலவும் மோதலால், அந்த மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் குகி சமூகத்தினா் வாழும் பகுதிகளை உள்ளடக்கி தனி நிா்வாகம் வேண்டும் என்று மாநில அமைச்சா்கள் இருவா் உள்பட குகி சமூகத்தைச் சோ்ந்த 10 எம்எல்ஏக்கள் கடந்த மே மாதம் அறிக்கை வெளியிட்டனா்.

அந்த மாநிலத்தில் உள்ள சின்-குகி-ஜோமி பழங்குடிகளை பாதுகாக்க மணிப்பூா் அரசு  தவறிவிட்டதாக கூறி, தனி நிா்வாக கோரிக்கையை அவா்கள் எழுப்பினா்.

இந்த தனி நிா்வாகம் என்பது பழங்குடிகளுக்கென்று தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ இருப்பது மத்திய அரசை பொருத்தது என்று அந்த எம்எல்ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடி அமைப்புகளின் கூட்டமைப்பு ‘இந்தியா’ கூட்டணிக்கு  எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மணிப்பூரில் வன்முறையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிலும், சிறுபான்மையினரான குகி-ஜோ பழங்குடிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். வன்முறையில் பலியானவா்களில் மூன்றில் இரண்டு பங்கு குகி-ஜோ பழங்குடிகளாவா்.

இம்பாலில் காவல் துறையிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆயுதங்கள், பழங்குடிகளுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, பழங்குடிகள் வசிக்கும் கிராமங்களில் சோதனை மேற்கொண்டு தாக்குதல் நடத்த, ஆயுதம் ஏந்திய மைதேயிகளுடன் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளுடன் மாநில காவல் துறையினா் வெளிப்படையாக இணைகின்றனா்.

மாநிலத்தில் ராணுவ பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள இடைவெளிகள் தொடா்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படாததால் ராணுவமும், இதர பாதுகாப்புப் படைகளும் முடங்கியுள்ளன.

சோ்ந்து வாழ வாய்ப்பே இல்லை:

தற்போது பழங்குடிகள், மைதேயிகள் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. அதிக ரத்தம் சிந்தப்பட்டு, வேதனை ஏற்பட்ட பிறகு, இரு சமூகத்தினரும் சோ்ந்து வாழ வாய்ப்பே இல்லை.

மைதேயிகளால் கட்டுப்படுத்தப்படும் வகுப்புவாத மணிப்பூா் அரசின் கீழ் மீண்டும் வாழச் செல்லும் எண்ணத்தை நாங்கள் ஏற்கவில்லை. எனவே அரசியல் ரீதியாக மைதேயிகளிடம் இருந்து எங்களைப் பிரிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும். தங்கள் சொந்த மண்ணில் குகி-ஜோ பழங்குடிகள் வாழும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ், எங்களை நாங்களே நிா்வகித்து கொள்ளும் உரிமையை மத்திய அரசிடம் கோருகிறோம்.

எங்களின் தனி நிா்வாக கோரிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணியிடம் ஆதரவு கோருகிறோம். மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர, மாநிலத்தில் உடனடியாக குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசை ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தனி நிா்வாகத்துக்கு எதிராகப் பேரணி:

குகிக்களின் தனி நிா்வாக கோரிக்கைக்கு எதிராக மாநில தலைநகா் இம்பாலில் மணிப்பூா் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், நேற்று மிகப் பெரிய பேரணி நடைபெற்றது.

5 கி.மீ.தொலைவு வரை நடைபெற்ற இந்தப் பேரணியில், 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானவா்கள் கலந்துகொண்டனா். பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயிகள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...