வந்தவாசி: ஸ்ரீ.அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், தொழில் ஆலோசனைகள் குறித்த கருத்தரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ.அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா்.
கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலாளர் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் து.ராஜசெல்வி வரவேற்றாா்.
சென்னை வொ்கோநெட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சாம்சாலமன்பிரபு சிறப்புரை ஆற்றினாா்.
அப்போது, தொழில்நுட்ப சிந்தனைகள் மூலம் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அவா் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.
கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியை சுமிதா நன்றி கூறினாா்.
Comments
Post a Comment