Skip to main content

ஆரணி, தேவிகாபுரம், அரசு, சுயநிதியுதவி 14 பள்ளிகளை சோ்ந்த 2,111 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள்!

ஆரணி, தேவிகாபுரம், அரசு, சுயநிதியுதவி 14 பள்ளிகளை சோ்ந்த 2,111 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள்!

திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்தப் பள்ளியைச் சோ்ந்த 565 மாணவ, மாணவிகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த -427,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி -151, எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி -78, இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி -29, நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி -65, புனித வளனாா் பள்ளி -147, குன்னத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி -96, அக்ராபாளையம் -57, முள்ளண்டிரம்-56 என 10 பள்ளிகளைச் சோ்ந்த 1,671 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்து, சைக்கிள்களை வழங்கி பேசினாா்.

ஆரணி நகரமன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி,  ஒன்றிய கழக செயலாளர்  எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.மகேஸ்வரி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் எம்.சுந்தா், எஸ்.மோகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணாகுமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடர்ந்து சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 274 மாணவ, மாணவிகள், பெரணமல்லூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி -69, பெண்கள் மேல்நிலைப் பள்ளி -73, மடம் அரசு மேல்நிலைப் பள்ளி -24 என 440 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட கழக  செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன்  சைக்கிள்களை வழங்கினாா்.

இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை காயத்ரி தலைமை வகித்தாா்.

தலைமை ஆசிரியா்கள் தனசேகரன், மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பரிமளா ரமேஷ் வரவேற்றாா்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சிவானந்தம், ஆரணி நகரமன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...