வந்தவாசி: ஆகஸ்ட் 20 மதுரை அதிமுக பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!
மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற உள்ள பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகள் குறித்து, வந்தவாசி தொகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில் நடைபெற்றது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட கழக அவைத்தலைவர் டி.கே.பி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் பி.ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார்
இந் நிகழ்வில், மாவட்ட துணைச்செயலாளர் டி.பி துரை ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் ஒன்றிய கழக செயலாளர்கள் அருகாவூர் அரங்கநாதன் அனக்காவூர் சி.துரை தெள்ளாறு டி.வி.பச்சையப்பன் ஆரணி ஜி.வி.கஜேந்திரன் வழக்கறிஞர் சங்கர் பெரணமல்லூர் ஜி செல்வராஜ் வந்தவாசி எம்.கே.ஏ லோகேஷ்வரன் வெண்குன்றம் முனுசாமி மற்றும் நகர கழக செயலாளர்கள் செய்யாறு கே.வெங்கடேசன் வந்தவாசி ஓட்டல் பாஷா பெரணமல்லூர் மூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் வெம்பாக்கம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெ.சிவா வந்தவாசி நகர இளைஞரணி செயலாளர் ராஜசேகர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அனக்காவூர் ஏ.வி சேகர் தனசேகர் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment