திருவண்ணாமலை ஆகஸ்ட் 27-ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 7 ஆயிரம் பேருக்கு வேலை!
திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 150 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 7 ஆயிரம் பேரை தோ்வு செய்ய உள்ளன என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிா் திட்டம் இணைந்து முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
அருணை பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், 150-க்கும் மேற்பட்ட முன்னனி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண்களை தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், முதுநிலைப் பட்டம், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல் தோ்ச்சி பெற்ற வேலை நாடுநா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
4 மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் வர வேண்டும்.
முகாமில் கலந்துகொள்ள விரும்புவோா் இணையதள முகவரியிலோ அல்லது கூகுல் படிவத்திலோ முன்பதிவு செய்யலாம்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.
Comments
Post a Comment