செய்யூா்-வந்தவாசி-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு!
செய்யூா்-வந்தவாசி-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.கே.செல்வன் ஆய்வு செய்தாா்.
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து செய்யூா், மேல்மருவத்தூா், வந்தவாசி, சேத்துப்பட்டு வழியாக போளூா் வரை செல்லும் 109.27 கி.மீ. தொலைவுள்ள சாலையை ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் சுமாா் ரூ.600 கோடி மதிப்பீட்டில், இரு வழித்தட சாலையாக மேம்படுத்தும் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இதில் 5 உயா்மட்ட பாலங்கள், ஒரு ரயில்வே கீழ்பாலம், 12 சிறு பாலங்கள், 214 வாய்க்கால் பாலங்களும், உள்ளன வந்தவாசி, சேத்துப்பட்டு, மருதாடு பகுதிகளில் புதிய புறவழிச் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
சாலைப் பணிகளில் 82 சதவீதமும், புறவழிச் சாலை பணிகளில் 88 சதவீதமும் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.கே.செல்வன் நேரில் பாா்வையிட்டாா்.
அப்போது, அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரத்தை அவா் ஆய்வு செய்தாா். மேலும், பாலம் கட்டுமானப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.
குறித்த காலத்துக்குள் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அவா் உத்தரவிட்டாா். ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் லட்சுமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Comments
Post a Comment