Skip to main content

ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? - முதல்வர்  மு.க.ஸ்டாலின்

பாஜக ஆட்சியில் 7 விதமான ஊழல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும்  ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாகை எம்.பி செல்வராஜின் இல்லத் திருமண விழா திருவாரூரில் உள்ள பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது

"நாடாளுமன்ற தேர்தலை நாம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கப்போகிறோம் என்றால், ஏதோ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலாக நினைத்துவிடக்கூடாது. ஆட்சிமாற்றத்துக்கான தேர்தல் என்றுகூட நினைத்துவிட வேண்டாம். இந்திய ஜனநாயகம் காப்பாற்றப் பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழகத்தை காப்பாற்றிவிட்டோம். இந்தியாவை காப்பாற்றக்கூடிய நிலைக்கு நாம் தற்போது வந்துள்ளோம். இந்தியாவை காப்பாற்ற தற்போது இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது.

பீஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் கூடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, ஒரு கூட்டணி உருவாக முதல் கூட்டத்தை பீஹாரில் நடத்தினோம்.

அதன் பின்னர் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம்.

அதில்தான் இந்தியா என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு, அதை அறிவித்தோம். வரும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் 1 ஆகிய 2 நாட்கள் மும்பையில் 3 வது கூட்டம் நடைபெற உள்ளது.

அந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளோம்.

அந்த கூட்டத்திற்கு நானும் செல்கிறேன் 9 வருடமாக மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த 9 ஆண்டுகளில், நாங்கள் ஆட்சிக்கு வந்து இதை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம் மக்களுக்கு இந்த நன்மைகளை செய்திருக்கிறோம் என்று எதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா? தேர்தலுக்கு முன்பு வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் கொடுப்பதாக பிரதமர் கூறினார். 15 ஆயிரம் கொடுத்தார்களா? ரூ. 15 கூட கொடுக்கவில்லை.

நாட்டில் உள்ள 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால அது நடக்கவில்லை. வேலைகள் பறிக்கப்பட்டிருக்கிறது.

இதைவிடக் கொடுமை மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை இரண்டாக்கி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முடிவு கட்டவே இந்தியா கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம்.

தமிழகத்தில் ஊழல் வந்துவிட்டதாம், 9 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் இருக்கக்கூடிய ஊழலை ஒழித்தே தீருவேன் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் பிரதமரை பார்த்து கேட்டுக் கொள்வது, ஊழைப் பற்றி பேசக்கூடிய யோக்யதை உங்களுக்கு உண்டா? நீங்கள் செய்த ஊழல் எல்லாவற்றையும் சி.ஏ.ஜி அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.

ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கிறது. சி.ஏ.ஜி என்பது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு வருடமும் அரசின் வரவு செலவுகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு வழங்குவது சி.ஏ.ஜியின் பணி. ஒன்றியத்தில் நடக்கும் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி . முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.

இதன்மூலம் பாஜகவின் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம், எச்எல்எம் விமான வடிவமைப்புத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்யா மேம்பாட்டுத் திட்டம். இந்த 7 திட்டங்களில் பல கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி மிக தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது.

நிதியை கையாளுவதில் மோசடி நடந்துள்ளதாக சி.ஏ.ஜி மிக தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு பொய்யான மோசடி செய்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப்பெற்ற நோயாளிகள் 88 ஆயிரத்து 760 பேர் இறந்துவிட்டனர்.

ஆனால் அவர்கள் இறந்த பிறகும் சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறி, 2 லட்சத்து 923 காப்பீடு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளனர்" இவ்வாறு  ஸ்டாலின் பேசினார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...