Skip to main content

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் கோலாகலம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், அற்புதங்களின் உறைவிடமாக, உலகப் புகழ் பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

பசலிக்கா அந்தஸ்து பெற்ற இத்தலம்,  கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது.
இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஊர்வலமும், அதற்கு முன்பாக தேர் பவனியும் நடைபெற்றது.

உற்சாகமான முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம், கடற்கரை சாலை, ஆர்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியே பேராலய வளாகத்தை வந்தடைந்தது.

பின்னர்,  தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், திருக்கொடியைப் புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளை நடத்தி அவர், கொடியைப் புனிதம் செய்வித்தார்.

பேராலய அதிபர் சி. இருதயராஜ், பங்குத் தந்தை எஸ். அற்புதராஜ் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோர் உடனிருந்து வழிபாடுகளை நிறைவேற்றினர்.

இதைத் தொடர்ந்து, மாலை சுமார் 6.40 மணிக்கு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது,  வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவே மரியே! மரியே வாழ்க! என விண்ணதிரும் வகையில் பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

கொடியேற்றத்தின்போது கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. பேராலயம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் முழுமையும் வண்ண மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டன. வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.

நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தஞ்சை சரக காவல் துறைத் துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், நாகை எஸ்பி ஜவஹர் மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந் நிகழ்வில்,பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாக வந்திருந்தனர்.

இதனால், நாகை - வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல, தெற்குப்பொய்கைநல்லூர் வழியேயான நாகை - வேளாங்கண்ணி சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இந்தச் சாலைகளில் பல இடங்களில் போலீஸார் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

11 மாவட்டங்களில் இருந்து 3500 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

23 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்தும், 90 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பக்தர்களுக்கு உதவும் வகையில் பல இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடலில் குளிக்கும் பக்தர்களை நெறிப்படுத்தும் பணியில் கடலோரக் காவல் குழும போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

ஆண்டுப் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணியை, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக தொழில்நுட்பக் குழுவினர் மேற்கொண்டனர்.

அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும்,  தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும் வேளாங்கண்ணி மற்றும் நாகைக்கு இயக்கப்பட்டன.

வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பில் சுகாதாரப் பராமரிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...