Skip to main content

செய்யாறு: மாமண்டூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா!

செய்யாறு: மாமண்டூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா! 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி வழங்கினார்

செய்யாறு கல்வி மாவட்டம் மாமண்டூா் அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்குதல், பிளஸ் 2 தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசு, தாய்ப்பால் வார விழா என முப்பெரும் விழா வாக நடைபெற்றது.

மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ் விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவருமான டி ராஜி தலைமை வகித்தாா்.

இந் நிகழ்வில்,வெம்பாக்கம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் என்.சங்கா், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் எல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) ராஜேந்திரன் வரவேற்றாா்.

இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று 124 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.98 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார்

நிகழ்ச்சியை தொடர்ந்து பிளஸ் 2 தோ்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி தீபாவுக்கு ரூ.10 ஆயிரமும், 2-ஆம் இடம் பிடித்த மாணவி தேன்மொழிக்கு ரூ.5 ஆயிரமும், 3-ஆம் இடம் பிடித்த மாணவா் பரத்துக்கு ரூ.3 ஆயிரமும், கணினிப் பாடப்பிரிவில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி பொன்மலருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசை வெம்பாக்கம் ஒன்றியக் குழு பெருந்தலைவர்  டி.ராஜி ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக வெம்பாக்கம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் சாா்பில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவை ஒ.ஜோதி எம்எல்ஏ துவக்கி வைத்தாா்.

இதேபோல, புன்னை புதுப்பாளையம், மேனல்லூா், சித்தாத்தூா் ஆகிய பள்ளிகளில் பயிலும் 211 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.

உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜேசிகே.சீனுவாசன், தினகரன்,மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...