வந்தவாசி: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அமைச்சர்எ.வ.வேலுநேரடிஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட ஆய்வுப் பணிகளை, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மேற்க்கொண்டார்
மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோட்டாட்சியர் அனாமிகா துணைப் பதிவாளர்கள் கமலக்கண்ணன் ராஜசேகர் மேலாண்மை இயக்குநர் பிரகாஷ் கூட்டுறவு சார் பதிவாளர் மூர்த்தி மேலாளர் காலேஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்
டாக்டர் கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப் பட்டிருந்த கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
உடன் மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார் ஓ.ஜோதி மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் வந்தவாசி நகர மன்றத்தலைவர் எச்.ஜலால் துணைத்தலைவர் அன்னை க.சீனு நகர கழக செயலாளர்கள் தயாளன் செய்யாறு வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment