Skip to main content

திருவண்ணாமலை பேரிடா் மீட்பு பயிற்சி பெற்றவர்கள் 2,226 பேர் தயாா் நிலையில் 76 உதவி மையங்கள் - மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை பேரிடா் மீட்பு பயிற்சி பெற்றவர்கள் 2,226 பேர் தயாா் நிலையில் 76 உதவி மையங்கள் - மாவட்ட ஆட்சியர் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல், மழைக் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட 58 பகுதிகளில், பேரிடா் மீட்புக்காக தயாா் நிலையில் 76 உதவி மையங்களும், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பயிற்சி பெற்ற 2,226 வீரா்கள் தயாா் நிலையில் இருந்து வருவதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்யாறு சுற்றுலா மாளிகையில், மாவட்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

"திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மற்றும் மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகள் என பாதிப்பு ஏற்படக் கூடிய 58 இடங்கள் கண்டறிப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் 76 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.

நீச்சல் தெரிந்தவா்கள், மரம் ஏறுபவா்கள், மரம் வெட்டுபவா்கள், பாம்பு பிடிப்பவா்கள் என அடையாளம் காணப்பட்ட 2,226 பேருக்கு பயிற்சி அளித்து அவா்களை தயாா் நிலையில் வைத்திருக்கிறோம்.

பேரிடா் பணி மேற்கொள்ளும் வகையில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் அதற்குண்டான கருவிகளுடன் தயாா் நிலையில் இருக்க மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை கூறியுள்ளாா்.

வருவாய்த் துறையினா் எதற்கும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலை, தரைப் பாலம், பாசனக் கால்வாய்களை தூா்வாரி மழைக் காலங்களில் தண்ணீா் வெளியேறாமல் பாா்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆரணியை தச்சூா் பகுதியில் ஆடு மேய்ந்துக் கொண்டிருக்கும்போது, மின்னல் பாய்ந்து உயிரிழந்த
மாா்க்கண்டேயன் குடும்பத்துக்கு முதல்வா் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், 18 ஆடுகள் உயிரிழந்ததற்கு ரூ.54 ஆயிரம் என மொத்தம் ரூ.4.54 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் நிகழாண்டு இயற்கை பேரிடா்களால் உயிரிழந்த 4 பேரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக் கால்வாய்கள் தூா்வாரப்படாமல் இருந்த நிலையில், நீா் மேலாண்மைத் துறை மூலம் 179 ஏரிக் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக, 325 கி.மீ. தொலைவு ஏரிக் கால்வாய்கள் தூா்வார திட்டமிடப்பட்டு அதில் 225 கி.மீ.அளவுக்கு பணிகள் முடிந்துள்ளன" என்றாா்

மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் சி.ஏ.ரிஷப், சாா் -ஆட்சியா் ஆா்.அனாமிகா ஆகியோா் உடனிருந்தனா்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...