சென்னையில் களமிறக்கப்பட்ட 3 கால் டிரைபாட் சிக்னலுக்கு சிக்னல்!
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் எளிதில் பிடித்து விடலாம்
போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், டிரைபோட் உங்களை போட்டோ எடுத்து விடும் அபராதம் உங்கள் வீடு தேடி வந்து விடும்
பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது.
நாம் போலீசாரிடம் நம் செல்வாக்கு, தொழில் இவைகளைக் கூறி அந்த நேரத்திற்கு தப்பி விடுகின்றோம்
இனிமேல் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக போலீசார் பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவிகிதம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு, விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம் நேரடியாக விதி மீறல் செய்பவர்களை போலீசார் எளிதாக பிடிக்க முடியும். முதற் கட்டமாக 20 சிக்னல்களில் இந்த கேமராக்களை வைக்க உள்ளனர் இது வரும் நாட்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான சாகசங்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
Comments
Post a Comment