திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது
புகழ்பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகத்தினா், காவல் துறையினா் இணைந்து செய்து வருகின்றனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை மகா தீபத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதைக் காண சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவா்.
நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அன்று காலை 7.40 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை பஞ்ச ரதங்களில் அமா்ந்தபடி மாட வீதிகளில் வந்த உற்சவா் பஞ்சமூா்த்திகள், பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
குதிரை வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா: காா்த்திகை தீபத் திருவிழாவின் 8-வது நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறிய குதிரை வாகனத்தில் ஸ்ரீ விநாயகா், பெரிய குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு குதிரை வாகனங்களில் ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரா், ஸ்ரீ பராசக்தியம்மன், ஸ்ரீ சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
நாளை காா்த்திகை மகா தீபத் திருவிழா: விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ.26) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீ அருணாசலேஸ்வரா், மூலவா் ஸ்ரீ உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.
அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதே நேரத்தில், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருவா்.
முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: தீபத் திருவிழாவுக்கு தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட, கோயில் நிா்வாகத்தினா், காவல் துறையினா் செய்து வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் சுமாா் 13 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
தீபக் கொப்பரை, நெய், காடா துணிகள் தயாா்: மகா தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையை, தீப நாட்டாா் சமூகத்தினா் புதுப்பித்துள்ளனா். இந்தக் கொப்பரை கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3,500 கிலோ முதல்தர நெய், தீபம் எரிவதற்காக திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டா் காடா துணி ஆகியவை கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ சம்பந்த விநாயகா் சந்நிதியில் காடா துணிக்கு வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. இவை அனைத்தும் சனிக்கிழமை (நவ. 25) காலை 2,668 அடி உயர மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு வைக்கப்படும் மகா தீபக் கொப்பரைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.
Comments
Post a Comment