Skip to main content

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழா நோயாளிகளுக்கு பிஸ்கட், அறுசுவை உணவுகள்!

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழா நோயாளிகளுக்கு பிஸ்கட், அறுசுவை உணவுகள்!

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் பிறந்தநாளையொட்டி வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழம் பிஸ்கட் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது  எரமலூர் கிராமத்தில் உள்ள இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் எஸ்.அம்பேத்குமார், ஓ ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,நகரமன்றத் தலைவர் எச் ஜலால்,வட்டாட்சியர்  பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வந்தவாசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில்  நகர கழக செயலாளர் ஏ. தயாளன், ஒன்றிய கழக செயலாளர்கள் டி.ராதா, ப. இளங்கோவன், சி.ஆர். பெருமாள்,
ஏ.சுந்தரேசன், மாவட்ட துணை செயலாளர்கள் என்.பாண்டுரங்கன், க. லோகநாதன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி,  நகராட்சி துணைத் தலைவர் அன்னை க.சீனு, மாவட்ட பிரதிநிதி கொட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா ஆதிகேசவன்,  மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஏ.மணிகண்டன்,  தெள்ளார் ஆ.கோபிநாதன்,தேசூர் நகர கழக செயலாளர் டி கே மோகன், தேசூர் ஈஸ்வரன் கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜெஎஸ். சரவணன், மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் வி. லட்சுமி, ஒன்றிய பொருளாளர் கீழ்நர்மா ரமேஷ், வந்தவாசி கிழக்கு இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் எம்.வினோத்குமார்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அங்குள்ள  நோயாளிகளுக்கு பழம் பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.

யாதவர் தெருவில் உள்ள வள்ளலார் மண்டபத்தில் அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கினார்

மேலும் மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

முன்னதாக வாழ்த்த சொல்ல வந்த அனைவரையும் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் இ.எஸ்.டி கார்த்திக் வரவேற்றார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...