செய்யாறு: கரந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம்!
செய்யாறு: கரந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம்!
செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியம் கரந்தை கிராமத்தில், ஊராட்சித் துறை சாா்பில் குழந்தை நேயபள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதி மூலம் ரூ.28 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா்.
வெம்பாக்கம் ஒன்றிய குழுத் தலைவா் த.ராஜி முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி புதிய பள்ளிக் கட்டடத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களுடன் இனிப்பு வழங்கினாா்.
முன்னதாக, வெம்பாக்கம் மத்திய ஒன்றியம், ஆலந்தாங்கல் கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா் சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி
இந் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம் ஊராட்சிக் குழு உறுப்பினா் மாத்தூா் தெய்வமணி, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜேசிகே.சீனிவாசன், எம்.தினகரன், என்.சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment