மோரணம்: அதிமுக 52 ம் ஆண்டு துவக்க விழா, கழக கொடியேற்றி, அன்னதானம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், 52 ம் ஆண்டு துவக்க விழா மோரணத்தில் நடைபெற்றது
கழக கொடியேற்றி கல் வெட்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
ஒன்றிய கழக செயலாளர்கள் வயலூர் ராமநாதன் திருமூலன் (எ) பையாகுட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில்,
சிறப்புஅழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் கணேசன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக கொடியேற்றி, கல் வெட்டு திறந்து வைத்தனர் இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருள் மாவட்ட விவசாய அணி செயலாளர் நமண்டி பாலன் மாவட்ட அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி செயலாளர் என்.ரகு மாவட்ட மாணவரணி செயலாளர் அரவிந்தன்
அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பாராசூர் பெருமாள் செய்யாறு நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் அவைத்தலைவர் ஜனார்த்தனம் அம்மா பேரவை செயலாளர் ஜெ.சிவா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment