நாகூர் கந்தூரி விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை!
நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் தர்காவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார் உலக புகழ் பெற்ற நாகூர் தர்கா மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழ்கிறது
இங்கு ஹஜ்ரத் ஷாகுல்அமீது பாதுஷா நாயகத்தின் 467 வது சந்தனக்கூடு கந்தூரி வைபவம் நடைபெற்று வருகிறது
இந் நிகழ்வில், பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் வருகை தந்தார்
அவருக்கு தர்கா நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது ஆளுநர் ரவி, ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா நிகழ்வில் பங்கேற்றார்.
பின்னர் தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், ''467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று எழுதினார்.
இது தொடர்பான ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பதிவில், ``ஆளுநர் அவர்கள், நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு வருடாந்திர கந்தூரி திருவிழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டின் குறிப்பாக தென் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நமது மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment