செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை அளித்தனர்.
தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது.
அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டது.
தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலமாக வந்தடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழக போலீஸாரின் அரசு மரியாதை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை அளித்தனர்.
அதன் பின்னர், குடும்பத்தார்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி , இறுதி சடங்குகளை செய்தனர். அதன் பிறகு "புரட்சி கலைஞர்" கேப்டன் விஜயகாந்த் என எழுதப்பட்ட சந்தன பேழையில் வைக்கப்பட்ட கேப்டனின் உடல் தேமுதிக தலைமை கட்டட அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது
இறுதிச்சடங்கு: தந்தையை பறிகொடுத்து விட்டு இருமகன்களும் நேற்று முதல் கதறி அழுது கொண்டே இருந்தனர். தமிழ் முறைப்படி மந்திரங்கள் ஓத இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் இரண்டு மகன்களுக்கும் மாலை அணிவித்து திருநீர் பட்டை அடித்துக் கொண்டு தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை செய்தனர். உழைப்பால் உயர்ந்த ஓய்வறியா நல்லதோர் மனிதரை பறிகொடுத்துவிட்டு ரசிகர்கள் தொண்டர்கள் பறிதவித்து இருந்த காட்சி கண்களில் நீர்வரவழைத்தது.
வாரி வாரி கொடுத்து சிவந்த கரத்தின் சொந்தக்காரர் விஜயகாந்தின் உடல் நம்மைவிட்டு பிரிந்தாலும், அவரின் தொண்டு, மக்களுக்கு செய்த சேவை உலகம் உள்ள ளவும் ஒலித்துக் கொண்டே இருக்கும்
Comments
Post a Comment