Skip to main content

Posts

Showing posts from May, 2024

"மொகலாய மன்னர் ஔரங்கசீப் வழியை பின்பற்ற விரும்புவோர் மீது புல்டோசர் நடவடிக்கை பாயும்" - உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

"மொகலாய மன்னர் ஔரங்கசீப் வழியை பின்பற்ற விரும்புவோர் மீது புல்டோசர் நடவடிக்கை பாயும்" - உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஔரங்கசீப்பின் ஆன்மா காங்கிரஸ் கட்சியை ஆட்கொண்டுள்ளதாகவும், தலிபான் மற்றும் ஷரியா நெறிமுறைகளை இந்தியா முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புவதாகவும் யோகி ஆதித்யநாத் சாடியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் இவ்வாறு பேசினார். இமாச்சல பிரதேசத்தின் ஹாமிர்பூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் "காங்கிரஸின் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம் லீக்கின் ஆவணம்.ஜிஸ்யா வரிக்கு இணையான வரியை விதிக்க முயல்கிறார்கள். நாட்டில் ஷரியா சட்டத்தை திணிக்கவும், தலிபான் முறையை அமல்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள். இது நடந்தால், பெண்கள் பள்ளி உட்பட எங்கேயும் செல்ல முடியாது; அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்றும் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார். முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் பாதையை பின்பற்றுபவர்கள் தனது புல்டோசர் மூலம் 'கையாளப்படுவார்கள்' என்றும் ய...

நாளை இறுதிகட்ட தேர்தல்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்!

நாளை இறுதிகட்ட தேர்தல்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்! நாடு முழுவதும் இறுதி மற்றும் 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்ந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி வீடியோ பதிவு ஒன்றை தொண்டர்களுக்காக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 'பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று நாட்டின் மகத்தான மனிதர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில், இண்டியா கூட்டணி அரசு அமையப் போகிறது என்பதை காங்கிரஸின் சிங்கம் போன்ற துணிச்சல் கொண்ட தொண்டர்களுக்கு நான் நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் கல்வி நிறுவனங்களை காக்க தலைவணங்காமல் நின்ற கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நான் இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் தொடர்ந்து திசைதிருப்ப பல்வேறு முயற்சிகளை செய்தாலும், பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளில் நாம் போராடி வெற்றி பெற்றோம். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்க...

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன் நிறைவடைகிறது

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன்  நிறைவடைகிறது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு திரும்புவது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 'தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள 21 நாட்கள் எனக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி நாளை மறுநாள் (ஜூன் 2) நான் மீண்டும் திஹார் சிறைக்கு திரும்புகிறேன். இந்த முறை என்னை எத்தனை நாள் சிறையில் வைக்க உள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், மனதளவில் நான் தெளிவாக உள்ளேன். சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து நாட்டைக் காக்க நான் சிறை செல்வதில் பெருமை கொள்கிறேன். என்னை வீழ்த்த முயன்று வீழ்ந்தது அவர்கள் தான். நான் சிறையில் இருந்தபோது பல்வேறு வகையில் என்னை சித்ரவதை செய்தனர். எனக்கான மருந்துகளை நிறுத்தினர். அவர்களுக்கு என்ன வேண்டும், ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. சிறையில் இருந்தபோது 70 கிலோ எடை இருந்தேன். இப்போது 64 கிலோ உள்ளேன். சிறையில் இருந்து வந்த பிறகும் உடல் எடை கூடவில்லை. தீவிர நோய் பாதிப்பின் அறிகுறியாக கூ...

இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரும் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது

இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரும் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதையடுத்து, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2-ம் அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கேஜ்ரிவால் தனது மனுவில் கூறியிருந்ததாவது: "எனது எடை மிகவும் குறைந்துள்ளது. ஒருவருக்கு எவ்வித காரணமும் இல்லாம...

ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "உலக நாடுகளில் இந்தியா என்று சொன்னாலே மகாத்மா காந்தியின் நினைவு தான் அனைவருக்கும் வரும். உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர். மனிதர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் அடக்குமுறைக்கு எதிராக மனித சமுதாயத்தின் சுயமரியாதைக்காக அகிம்சை முறையில் போராடி தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக நீதியை நிலைநாட்டியவர் காந்தியடிகள். உலகமே வன்முறை தான் வாழ்க்கை, வன்முறை தான் கடைசி ஆயுதம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அதற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் காந்தியடிகள். நாட்டு மக்களிடம் அன்பை மட்டுமே காட்டிய அவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினாலும், இந்து மகாசபையை சேர்ந்த சாவர்க்கரினாலும் மூளை சலவை செய்யப்பட்டு மதவெறி தூண்டப்பட்டு வெறுப்பினால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை படுகொலை செய்தார். படுகொலை செய்தவர் நாதுராம் கோட்சே. ஆனால், அவரது கொலை முயற்சிக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இந்து ம...

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஜூன் 2-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஜூன் 2-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் காரல் மார்க்சின் 206-வது பிறந்தநாள் விழா செங்குடை பேரணி மற்றும் பயிலரங்கம் திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து மார்க்ஸ் உருவம் பதித்த செங்குடை பேரணி புறப்பட்டது. வேலூர் சாலை வழியாக சென்று, பயிலரங்கம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் நோக்க உரையாற்றினார். இந்திய நாட்டுக்கு வழிகாட்டும் மார்க்சியம் என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மார்க்சிய விஞ்ஞானமும் புரட்சிகளின் வரலாறு என்ற தலைப்பில் மாநில குழு உறுப்பினர் இரா.சித்தன், இந்தியாவை பற்றி மார்க்ஸ் என்ற தலைப்பில் தமிழ்நாடு தேசிய பல்கலைக் கழக திருச்சி முனைவர் பி.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காசா மீதான போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலஸ்தீனர்களை இனப்படுகொலை...