"மொகலாய மன்னர் ஔரங்கசீப் வழியை பின்பற்ற விரும்புவோர் மீது புல்டோசர் நடவடிக்கை பாயும்" - உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
"மொகலாய மன்னர் ஔரங்கசீப் வழியை பின்பற்ற விரும்புவோர் மீது புல்டோசர் நடவடிக்கை பாயும்" - உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஔரங்கசீப்பின் ஆன்மா காங்கிரஸ் கட்சியை ஆட்கொண்டுள்ளதாகவும், தலிபான் மற்றும் ஷரியா நெறிமுறைகளை இந்தியா முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புவதாகவும் யோகி ஆதித்யநாத் சாடியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் இவ்வாறு பேசினார். இமாச்சல பிரதேசத்தின் ஹாமிர்பூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் "காங்கிரஸின் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம் லீக்கின் ஆவணம்.ஜிஸ்யா வரிக்கு இணையான வரியை விதிக்க முயல்கிறார்கள். நாட்டில் ஷரியா சட்டத்தை திணிக்கவும், தலிபான் முறையை அமல்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள். இது நடந்தால், பெண்கள் பள்ளி உட்பட எங்கேயும் செல்ல முடியாது; அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்றும் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார். முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் பாதையை பின்பற்றுபவர்கள் தனது புல்டோசர் மூலம் 'கையாளப்படுவார்கள்' என்றும் ய...